கஜ புயல் காரணமாக நாகை புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. அம்மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை அதனால் தனிநபர்களும் தொண்டு நிறுவனங்களும் பெரிதும் உதவி வருவதாகவும் ஆனால் அவை போதவில்லை என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள்
சினிமா
ரஜினி நடித்துள்ள 2.ஓ படம் நவம்பர் 29-ந் தேதி வெளியாக உள்ளது. இந்தப்படத்தின் ரசிகர் மன்ற காட்சிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு வெளியில் விற்பனை செய்யும் மன்றத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘ரஜினி நடித்து
நயன்தாரா இப்போது அஜித்துடன் விஸ்வாசம் சிவகார்த்திகேயனுடன் ஜித்துஜில்லாடி உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து கமலுடன் இந்தியன் 2 படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அப்படத்திலிருந்து அவர் விலகிக் கொண்டார். படத்துக்காகக் கேட்ட தேதிகளை மொத்தமாகக் கொடுக்கமுடியவில்லை என்கிற காரணம் சொல்லப்பட்டதாம். ஆனால், படத்தில் குதிரையேற்றம்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி உட்பட பலர் நடித்திருக்கும் 2.ஓ படம் நவம்பர் 29 அன்று வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் வியாபாரம் இப்போது வேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம். இப்படத்தை கேரளாவில் வெளியிட நடிகர் மோகன்லால் விரும்பினாராம். அதனால் மற்ற விநியோகஸ்தர்கள் எவ்வளவு தொகை கொடுக்கிறார்களோ அவ்வளவை நான் கொடுக்கிறேன் படத்தைக் கொடுங்கள் என்று நண்பர்கள் மற்றும்
அஜித்தின் அடுத்த படம் குறித்தும் பரவும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட வெற்றிப் படங்களை படங்களை இயக்கிய வர் எச்.வினோத். இவர் அடுத்ததாக அஜித்தின் தல 59 படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வினோத் இயக்கும் படம் பிங்க் என்கிற இந்திப் படத்தின் ரீமேக் என்றும், புதிய கதை என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள்
தமிழ்த் திரையுலகில் புதிய படங்கள் வெளியாகும் போது திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து சி.டி தயார் செய்து பைரசி மாபியாக்கள் பணம் சம்பாதிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்செயலுக்கு சில திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்து உடந்தையாக இருப்பதாக தயாரிப்பாளர்களால் குற்றம் சாட்டப்பட்டது தமிழகத்தில் இக்குற்றச்சாட்டுக்கு உள்ளான பத்து திரையரங்குகளுக்கு புதிய படங்களை திரையிட
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. பொங்கல் வெளியீடு என்று படக்குழு அறிவித்திருக்கிறது. இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், சிம்பு முதலில் விநியோகஸ்தர்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து படக்குழுவினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனால், இப்படத்தின் வெளியீட்டு நேரத்தில் பிரச்சினை
இயக்குநர் பா.ரஞ்சித் சார்பில் நவம்பர் 13 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்…. “காலா” திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். “நமா பிக்சர்ஸ்” மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இத்திரைப்படம், ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வீரச் சமர் புரிந்த பழங்குடியின போராட்டக்காரர்
ஷங்கர் கமல் இணையும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார்கள். படத்தின் கதை மற்றும் சம்பள விசயங்கள் சரியாக அமைந்துவிட்டதால் நயன்தாரா நடிப்பது உறுதியாகிவிட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படத்தில் நயன்தாரா இல்லை. காஜல்அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். ஏன்
பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவான பரியேறும்பெருமாள் படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால் இயக்குநர் மாரிசெல்வராஜுக்கும் திரையுலகில் நல்ல வரவேற்பு. இப்போது அவருடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தை அவர் இயக்கவிருக்கிறார்.




















