மீண்டும் இணையும் மிஷ்கின் விஷால்
விஷால் இப்போது வெங்கட்மோகன் எனும் புது இயக்குநர் இயக்கத்தில் அயோக்யா என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படம் நிறைவடையும் நிலையில் இருக்கிறது.
இப்படத்தைத் தொடர்ந்து விஷால் மீண்டும் மிஷ்கினோடு இணையவிருக்கிறார். கடந்த ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார் விஷால்.
மிஷ்கின் இப்போது உதயநிதியை வைத்து சைக்கோ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறதாம்.
இப்படத்தை முடித்துவிட்டு மிஷ்கின் வரவும் அயோக்யா படத்தை முடித்துவிட்டு விஷால் வரவும் சரியாக இருக்கும் என்கிறார்கள்.
2019 மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் மிஷ்கின் விஷால் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் சொல்கிறார்கள்.