விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி,விக்ரம் நடித்த இருமுகன்,விஜய்தேவரகொண்டா நடித்த நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த்சங்கர். இவர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தை தனுஷிடம் மேலாளராகப் பணியாற்றிய வினோத்
சினிமா
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்தப்படம்.
பாரதிராஜாவை தலைவராகக் கொண்டு ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.இச்சங்கத்தின் செயலாளராக டி.சிவா பொருளாளராக டிஜி.தியாகராஜன் உட்பட இதன் நிர்வாகிகள் அனைவருமே போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா சென்னையில் இன்று (செப்டம்பர் 14) நடைபெற்றது.
தற்போது படங்கள் தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைந்து ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.இச்சங்கத்தின் தலைவராக பாரதிராஜா செயலாளராக டி.சிவா பொருளாளராக திஜி.தியாகராஜன் உட்பட இதன் நிர்வாகிகள் அனைவருமே போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய
கொரோனா சிக்கல் காரணமாக தடைபட்டிருந்த திரைப்படப்படப்பிடிப்புகளை செப்செம்பர் 1 முதல் நடத்திக் கொள்ள தமிழக அரசு அறிவித்திருந்தது. அவ்வறிப்பைத் தொடர்ந்து, விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் புதிய படத்தில் டாப்சி நாயகியாக நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தினை தீபக்
லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் அவருடைய 64 ஆவது படம். அப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த
சுந்தர்.சி இப்போது ஆர்யா நடிக்கும் அரண்மனை 3 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.அதோடு அவர் தயாரிப்பில் இன்னொரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி கன்னடத்தில் வெளியான படம் மாயாபஜார் 2016. ராஜ் பி.ஷெட்டி, வசிஸ்டா சிம்ஹா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. 2016 ஆம் ஆண்டு நடந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மையமாக வைத்து
நடிகர் மயில்சாமி சமூகவலைதளமான ட்விட்டரில் இணைந்திருக்கிறார்.ட்விட்டர் கணக்கு தொடங்கி ஆறு பேரைப் பின் தொடர்கிறார்.அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான், தனுஷ், விவேக், இசையமைப்பாளர் தினா ஆகிய ஆறு பேரை அவர் பின் தொடர்கிறார். தற்போதைய சமூக அவலங்கள் கண்டு கொதிக்கும் அவர் தன் கோபங்களையும் சமுதாய அக்கறையை வெளிப்படுத்தவுமே இந்தக் கணக்கைத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.
குட்டிப்புலி, கொம்பன், மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. அவற்றிற்கு அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்றும் விஷாலை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், அவர் விக்ரம்பிரபுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கார்த்தி மற்றும் விஷால் படங்கள் தள்ளிப்போய்க்
தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் திரைப்பட நிறுவனம் ஏவிஎம். கடந்த பல ஆண்டுகளாக திரைப்படத் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தது. 2011 ஆம் ஆண்டு விதார்த் நடித்த முதல் இடம் எனும் திரைப்படத்தைத் தயாரித்திருந்தது. அதன்பின் 2014 இல் இதுவும் கடந்து போகும் எனும் படத்தைத் தயாரித்து நேரடியாக யூடியூபில் வெளியிட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் இப்போது மீண்டும் தயாரிப்பில்





















