விஜய்யின் 64 ஆவது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் அப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.இதைத் தொடர்ந்து விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது.ஆனால் சம்பளச் சிக்கல் காரணமாக அக்கூட்டணியில் பிளவு
சினிமா
தமிழகத்தில் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் மூடப்பட்டிருந்த திரையரங்குகளை இம்மாதம் பத்தாம் தேதி முதல் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. திரைப்படத் துறையினருக்குப் பெரிதும் மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பு இது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியும் தன் பங்குக்கு திரைத்துறையினரை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. சிறிய படங்களை யாரும் கண்டுகொள்வதில்லை என்கிற வருத்தத்தைப் போக்கும்
விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால் சம்பளச் சிக்கல் காரணமாக அக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. அதன்பின் விஜய்யின் 65 ஆவது படத்தை மகிழ்திருமேனி இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. விஜய்யிடம் கதை சொன்னவர்களில் மகிழ்திருமேனியின் கதைதான் விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படம் 2019 அக்டோபர் 25 அன்று வெளியானது. அப்படம் வெளியாகி ஓராண்டு கடந்துவிட்டது. அப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் படம் தயாராகிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் அப்படத்தின் இயக்குநர் அட்லியின் அடுத்தபடம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேசமயம், அட்லி அடுத்து ஷாருக்கான் நடிக்கும் இந்திப்படத்தை இயக்கப்போகிறார்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரண்டைத் தவிர இன்னும் சிலரும் போட்டியிடுகின்றனர். தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி என்கிற பெயரில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி போட்டியிடுகிறது.
ராக்போர்ட் எண்டர்டெயிட்மெண்ட் முருகானந்த்ம் நேர்காணல் நேற்று நம் இணையதளத்தில் வெளியானது. அதில்…நீங்கள் வாங்கி வெளீயிடும் படங்கள் மற்றும் விநியோகம் செய்யும் படங்கள் எவை? என்ற கேள்விக்கு, மாஸ்டர் படத்தின் கோவை வெளியீட்டு உரிமை பெற்றிருக்கிறோம்.பூமி படத்தின் சென்னை செங்கல்பட்டு தவிர்த்து தமிழக உரிமை பெற்றிருக்கிறோம் என்று சொல்லியிருந்தார். அதனையொட்டி, மாஸ்டர் பட
20 ஆண்டுகளாக சுமார் 200 படங்களுக்கு மேல் விநியோகம் செய்த அனுபவம் மற்றும் திரையரங்குகள் நடத்திய அனுபவம் ஆகியனவற்றிற்குப் பிறகு திரைப்ப்டத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார் முருகானந்தம். இவருடைய ராக்போர்ட் எண்டர்டெயிட்மெண்ட் நிறுவனம் இப்போது நேரடியாகப் படத்தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறது. அதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் மற்றும் பிசாசு 2 ஆகிய படங்களை நேரடியாகத் தயாரிப்பதோடு
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் முரளி இராமசாமி தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரு அணிகள் தவிர சுயேச்சையாகச் சிலர் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் முன்னாள் தலைவர் கலைப்புலி தாணு தலைமையில் ஒரு அணி போட்டியிடும் என்று
இன்று (அக்டோபர் 28) காலை இயக்குநர் சீனு ராமசாமி, “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். இதனால் பரபரப்பு உண்டானது. இலங்கை மட்டைப்பந்தாட்ட வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைக்கதையை வைத்து அறிவிக்கப்பட்ட ‘800’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் விஜய் சேதுபதி. இதற்குப் பெரும்
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சில படங்கள் இயக்கிய பிறகு தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். 2011 ஆம் ஆண்டு வெளீயான எங்கேயும் எப்போதும் படம் மூலம் அவர் தயாரிப்பாளரானார். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து அவர் படங்கள் தயாரித்தார். எங்கேயும் எப்போதும் படத்தைத் தொடர்ந்து வத்திக்குச்சி, ராஜாராணி, மான் கராத்தே, பத்து எண்றதுக்குள்ள, ரங்கூன் ஆகிய படங்களைத் தயாரித்தார். இவற்றில் மான்





















