இலங்கை மட்டைப்பந்தாட்ட அணி வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையைத் திரைப்படமாக்கப் போவதாக மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. 800 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் முத்தையா முரளிதரன் கதைக்கு ‘800’ என பெயர்
சினிமா
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படத்தைத் தயாரித்த மாதவ் மீடியா நிறுவனம் இந்தப்படத்தைத்
2010 அக்டோபர் 1 ஆம் தேதி வெளியான படம் எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜுகிபா கதை, ‘திக்திக் தீபிகா’ என்ற பெயரில் கடந்த 2007 ஆம் ஆண்டு நாவலாக வெளியானது. 2010 அக்டோபரில் எந்திரன் படம் வெளியானதும்,அதைப் பார்த்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் ‘எந்திரன்’ திரைப்படத்தின்
2019 ஆம் ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்று கோமாளி. புதுஇயக்குநர் பிரதீப்ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி காஜல் அகர்வால் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அந்தப்படம் நல்ல வரவேற்பையும் பெரிய வெற்றியையும் பெற்றது. ஒரு படம் வெற்றி பெற்றால் அப்படத்தின் இயக்குநருக்கு நிறைய கிராக்கி ஏற்படும் என்கிற தமிழ்த்திரையுலகத்தின் வழக்கத்துக்கு பிரதீப்ரங்கநாதனும் தப்பவில்லை.
புது இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடிக்கும் சக்ரா படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவடைந்தது. இதற்கடுத்து,ஏற்கெனவே திட்டமிட்டபடி அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் விஷால். இந்தப்படத்தை தனுஷிடம் மேலாளராகப் பணியாற்றிய வினோத் தயாரிக்கிறார்.ஆர்யா வில்லனாக
ஆபாச இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி நடித்துள்ள படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா கடும் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதில் சொன்ன ஆபாச இயக்குநர், பாரதிராஜாவின் டிக்டிக்டிக் படம் குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதனால் பல தரப்பிலிருந்தும் அவருக்குக் கடும் கண்டனங்கள் பறந்தன. இதனால், பாரதிராஜா குறித்துப் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் சந்தோஷ்
இலங்கை மட்டைப்பந்தாட்ட அணியின் முன்னணி வீரராக இருந்து ஓய்வு பெற்றவர் முத்தையா முரளிதரன். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர். முத்தையா முரளிதரன் வாழ்க்கைக் கதையில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமானார். முத்தையா முரளிதரன் தமிழினப்படுகொலைக் குற்றவாளிகளான இராஜபக்சே சகோதரர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரை செய்தவர். அதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதான
விஷால் தயாரித்து நடிக்கும் சக்ரா படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஓரிருநாட்களில் மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்கிறார்கள். இதற்கடுத்து, அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் விஷால். இந்தப்படத்தை தனுஷிடம் மேலாளராகப் பணியாற்றிய வினோத்
கொரோனா சிக்கல் காரணமாக மார்ச் மாதம் பாதியிலிருந்து திரைப்படப் படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டன. திரைப்படப் படப்பிடிப்புகள் நடக்காமல் கடந்த ஆறு மாதங்கள் கடும் நெருக்கடியில் இருந்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. செப்டெம்பர் 3 ஆம் தேதியே புதியபடத்தின் படப்பிடிப்பில் கலந்து
அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.இந்தப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் முக்கியக் காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளது படக்குழு. கொரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். கொரோனா அச்சுறுத்தலுக்குப்





















