சின்னத்திரை நடிகை சித்ரா, டிசம்பர் 9 ஆம் தேதி பூந்தமல்லி அருகே பழஞ்சூர் தனியார் நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவருடைய கணவர்
சினிமா
2011 ஆம் ஆண்டு விதார்த் நடித்த முதல் இடம் எனும் திரைப்படத்தைத் தயாரித்திருந்தது. அதன்பின் 2014 இல் இதுவும் கடந்து போகும் எனும் படத்தைத் தயாரித்து நேரடியாக யூடியூபில் வெளியிட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கத் தயாரானது. ஆனால் திரைப்படம் தயாரிக்காமல் திரைப்படங்களுக்கு இணையாக ஓர் இணையதளத் தொடரரைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். 2010 ஆம் ஆண்டு சனவரி 14 ஆம் தேதி பொங்கல் நாளில் இப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான அந்தப்படத்துக்குப் போதிய வசூல் வரவேற்பு கிடைக்கவில்லை. அதேநேரம் விமர்சகர்களால் அப்படம் கொண்டாடப்பட்டது. ஆழமான கருத்துருகளைக் கொண்ட இந்தப்படம் இப்போது
நேற்று (டிசம்பர் 28,2020) தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம், படூர் ரமேஷ் வள்ளியப்பன் உள்ளிட்டோர் சந்திப்பில் கலந்து கொண்டனர். திரையரங்குகளுக்குள் இப்போது 50 சதவீத மக்களை அனுமதிக்கலாம் என்ற அரசு உத்தரவை மாற்றி 100 சதவீத மக்களை அனுமதிக்க வேண்டும். திரையரங்குகளுக்கு வரும்
டிசம்பர் 27 ஆம் தேதி இரவு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்திருக்கிறார். சுமார் அரைமணி நேரம் நடந்த அச்சந்திப்பின் போது, திரையுலகின் கஷ்டங்களை முதல்வரிடம் எடுத்துக்கூறிய விஜய், திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகளிலும் மக்களை அனுமதிக்கும் அனுமதியை அரசு வழங்கினால்தான் திரையுலகம் மீண்டுவரும் வழி பிறக்கும். எனவே அதை நீங்கள் செய்து கொடுக்கவேண்டும்
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தயாராகி கிட்டத்தட்ட பத்துமாதங்கள் ஆகிவிட்டன. ஏப்ரல் 9 ஆம் தேதி படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. கொரோனாவால் எல்லாம் மாறிப்போய்விட்டது. இப்போது பல்வேறு நிலைகளைக் கடந்து 2021 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 13 ஆம் தேதி படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்போதுவரை தமிழ்நாடு திரையரங்குகளில் 50 விழுக்காடு மட்டுமே மக்கள் அனுமதிக்கப்பட
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நாயகனாக நடிக்கும் படம் மாநாடு. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார்.இவர்களோடு எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் எஸ் ஏ சி, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே.பாரதி, பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துவருகிறார்கள். ஏற்கனவே சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் இரண்டு கட்ட
தர்பார் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்க இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் சன் பிக்சர்ஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்திலிருந்து விலகி விட்டார். இதையடுத்து விஜய்யின் அடுத்த படத்தை ‘டாக்டர்’ பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் படத்திலிருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ்
இயக்குநர்கள் மணிரத்னம் ஜெயேந்திரா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி படம் உருவாகி வருகிறது. கே.வி.ஆனந்த், கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பொன்ராம், ஹலிதா சமீம், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார் உள்ளிட்ட 9 இயக்குநர்களின் கதை இந்த ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்றுள்ளது. சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் ஐஸ்வர்யா ராஜேஷ்,
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’. இப்படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை டீகே இயக்கி உள்ளார். இப்படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையன்று (டிசம்பர்.25) வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.





















