சிவகுமார் கல்வி அறக்கட்டளையின்’ 39 ஆம் ஆண்டு நிகழ்வு , சென்னை வடபழனி பிரசாத் லேப்-ல் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியது…. கல்வி, ஒழுக்கம் இவ்விரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது. அப்படி வாழ்ந்து, உணர்ந்து கற்றுக் கொண்ட விஷயத்தைத் தான் எடுத்துச்
நடிகர்
நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா. அவரும் நடிகர்தான். புத்தகம்,அமரகாவியம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் . இப்போது சந்தனதேவன் உட்பட ஓரிரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜூன் 17 அன்று திருமணம் நடக்கிறது. ஆர்யாவுக்கு நெருக்கமான நடிகர்கள் மற்றும் உறவினர்களை மட்டும் அழைத்து திருமணம் செய்கிறார்களாம். ஆர்யாவைப் பொறுத்தவரை எல்லோருடனும் கலகலப்பாகப் பழக கூடியவர்.
இந்தியா முழுவதும் காலா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலம் குர்சியாங் என்ற பகுதியில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பில் பங்கேற்க சென்றுள்ளார். அப்போது அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கௌதம் தேபை சந்தித்துப்பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், காலா
2012 ஆம் ஆண்டு வெளியான சிம்பு நடித்த போடாபோடி, 2015 ஆம் ஆண்டு வெளியான விஜய்சேதுபதியின் நானும் ரவுடிதான், 2018 சனவரியில் வெளியான சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ்சிவன். இவர் இயக்குநர் என்பதைவிட நயன்தாராவின் காதலர் என்பதால் அதிகம் அறியப்பட்டவர். இவருக்கு தானா சேர்ந்த கூட்டம் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் இன்னும் அமையவில்லை. இந்நிலையில் நேற்று
நடிகர் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் , படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா , நாயகன் கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன் , இயக்குநர்
ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நாயகனாகவும் புதுமுகம் நடாசாசிங் நாயகியாகவும் நடிக்கும்புதியபடம் ஜிப்ஸி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று நாகப்பட்டினத்தில் தொடங்கியது. பயணத்தை மையமாகக்கொண்டு ராஜூமுருகன் எழுதிய தொடரையே படமாக எடுக்கிறார்கள். நாகப்பட்டினத்தில் முப்பது நாட்கள் நடக்கவிருக்கிறதாம். அதைத் தொடர்ந்து கேரளாவில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம். அம்பேத்குமார்
சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் சிறைத்துறையில் பணியாற்றியவர். பதினைந்தாண்டுகளுக்கு முன்பாக அவர் மறைந்துவிட்டார். அவர் மறைந்து இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் அவரோடு பணியாற்றிய சிறைத்துறை காவலர் செளந்தர்ராஜா என்பவர், அவர் என்னுடைய ஆபீசர், அவரிடம் பணியாற்றியதற்காக பெருமைப்படுகிறேன்.அவருடைய நினைவுகள் மறக்கமுடியாதவை என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு, என் தந்தை மறைந்து
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படம் ஜூன் 7 அன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரித்திருக்கிறார். காலா படத்தை மருமகன் தயாரிக்கிறார் என்பதற்காக இலவசமாக ரஜினிகாந்த் நடிக்க வில்லையாம். ஜிஎஸ்டி வரியோடு சேர்த்து சம்பளம் வாங்கிக் கொண்டார் என்று சொல்கிறார்கள். சம்பளம் மட்டும் இல்லையாம். படத்தின் இலாபத்திலும் பங்கு
காலா படம் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்காக உலகம் முழுக்க காலா படம் அனுப்பப்பட்டிருக்கிறது. அங்கிருந்து வரும் தகவல்கள் ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கின்றன. தமிழகத்தின் திருநெல்வேலியிலிருந்து மும்பை செல்லும் ஒரு தமிழர் அங்குள்ள மக்களுக்காகப் போராடுவதுதான் காலா படத்தின் மையக்கதை என்று சொல்லப்பட்டிருக்கிறது. ரஜினி அந்த வேடத்தில் நடித்திருப்பதால் படத்துக்கு
நாளை (ஜூன் 7,2018) ரஜினி நடித்த காலா படம் வெளியாகவிருக்கிறது. கர்நாடகாவில் இப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக சென்னை போயஸ் கார்டனில் இன்று காலை 8.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த்.அப்போது அவர் கூறியதாவது… காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியது சுப்ரீம் கோர்ட் ஆர்டர். இதை நான் கூறியதில் என்ன தப்பு இருக்கு என்று























