தக்லைஃப் பட பாடல் வரிசைகளில் இடம்பெற்று படத்தில் இடம்பெறாத பாடல்,முத்த மழை இங்கு கொட்டித் தீராதோ என்ற பாடல்.அந்த தொடக்க வரியை விட, காலை கனவினில் காதல் கொண்டேன் கண் விழித்தேன் அவன் காணவில்லை என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியுமளவுக்கு அந்தப்பாடல் புகழ் பெற்றிருக்கிறது. இந்தப்பாடல் புகழ் பெற்ற
2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படம் மொழி. ராதாமோகன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, சொர்ணமால்யா, வத்சலா ராஜகோபால், பிரம்மானந்தம், எம்.எசு.பாசுகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவு கே.வி.குகன், இசை வித்யாசாகர். படத்தொகுப்பு மு.காசிவிசுவநாதன். பிரகாஷ் ராஜே இந்தப்படத்தைத் தயாரித்திருந்தார்.
சமுதாயத்தின் நடுத்தட்டில் இருக்கும் மக்கள் வாழ்க்கை குறித்து கதை எழுத நினைக்கும் எழுத்தாளர், அதற்காக நடுத்தரக் குடும்பங்களைப் பற்றி அறிய முனைகிறார்.அந்தப் பயணத்தில் அவருடைய முந்தைய கருத்துகள் முற்றிலும் உடைகின்றன.அவை என்ன? என்பதைச் சுவையாகச் சொல்லியிருக்கும் படம் மெட்ராஸ் மேட்னி. கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் காளி வெங்கட்.இது திரைப்படம் நாம் நடிக்கிறோம் என்று
மதமாற்றம் தொடர்பாக நாட்டில் நடக்கும் சர்ச்சைகளைப் பற்றிப் பேசுகிற படமாக வந்திருக்கிறது பரமசிவன் பாத்திமா.திண்டுக்கல்லில் உள்ள மலை கிராமம் மதமாற்றச் சிக்கல்களால் இரண்டாகப் பிரிகிறது.இதற்கிடையே இக்கிராமங்களில் கொலைகள் நடக்கின்றன.அவை எதற்காக? அதைச் செய்பவர் எவர்? அதற்கான காரணம் என்ன? என்பனவற்றிற்கான விடைகள்தாம் படம். கதாநாயகனாக இருப்பதைக் காட்டிலும் கதைநாயகனாக இருக்கவேண்டுமென
நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக திரைப்பட நிதியாளர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை
டெல்லியில் தாதாவாக இருக்கிறார் கமல்ஹாசன்.அவருக்கும் காவல்துறைக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் தவறுதலாக ஒருவர் இறந்துவிடுகிறார். அவருடைய மகன் சிம்பு. அவரை எடுத்து வளர்க்கிறார் கமல்.சிம்பு வளர்ந்து ஆளாகிறார்.அப்பாவைப் போலவே தாதாவாகிறார்.இருவருக்குள்ளும் முரண்பாடு வருகிறது.கமலைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அதில் கமல் தப்பித்தாரா? சிம்பு என்ன செய்தார்? இறுதியில்
நூறு சட்டங்கள் ஆயிரம் கட்டுப்பாடுகள் போட்டாலும் சாதிவெறி கொண்டு செய்யும் ஆணவப் படுகொலைகளுக்குப் பஞ்சமில்லை என்பதுதான் எதார்த்தம்.அதற்கெதிராக சமுதாயத்தில் பல்வேறு தரப்பினர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.திரையில் அதைத் தொடர்ந்திருக்கும் படம் பேரன்பும் பெருங்கோபமும். மருத்துவமனையொன்றில் நடக்கும் குழந்தை கடத்தல் நிகழ்வில் அங்கு மருத்துவப் பணியாளராகப் பணியாற்றும் நாயகன்
தமிழ் சின்னத்திரை உலகில்,மக்களின் பேராதரவைப் பெற்ற,தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில்,திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் “சின்ன மருமகள்”. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பொதுவாகவே தமிழில் நெடுந்தொடருக்கு,தமிழகப் பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது.
அறிமுக இயக்குநர் ப.முருகசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குயிலி’ திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி,புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன்ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ்ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜூ ஸ்மித்இசையமைத்திருக்கிறார்.பிஎம் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ.அருண்குமார் தயாரித்துள்ளார்.
தக் லைஃப்’ படத்தின் விளம்பர நிகழ்வின் போது, “கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை தூண்டியது. இதையடுத்து அவர் நடித்துள்ள தக் லைஃப் படத்திற்கு தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து தனது படத்தின் வெளியீட்டிற்குப் பாதுகாப்பு கோரி கமல்ஹாசன், கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கின்























