முன்னோட்டம் வந்தபோதே ஆச்சாரமான பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்த பெண் அசைவ உணவு சமைப்பது போன்று காட்டுவதா எனப் பரபரப்பைக் கிளப்பிய படம் அன்னபூரணி. நயன்தாரா மற்றும் ஜெய் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார்,
திருட்டு வேலைகள் செய்யும் கதாநாயகன், காதலில் விழுந்ததும்,காதலிக்குப் பிடிக்கவில்லை என்பதால் திருட்டுத் தொழிலை விட்டுவிடுகிறார். ஆனால், அதே காதலிக்காக மீண்டும் அவ்வேலையில் ஈடுபடுகிறார். அது ஏன்? எதற்காக? என்பதையெல்லாம் சொல்லும் படம்தான் லாக்கர். நாயகனாக நடித்திருக்கும் விக்னேஷ் சண்முகத்துக்கு இது முதல்படம். ஆனால் அது தெரியாத வண்ணம் நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள்
இலண்டனில் வசிக்கும் மருத்துவர் ரிச்சர்ட்ரிஷி. அன்பான மனைவி புன்னகைப்பூ கீதா. கிளி போல் மனைவி இருந்தாலும் குரங்கு போல் துணைவி தேடும் ஆண்கள் வரிசையில் சேரும் ரிச்சர்ட்ரிஷி, மேலும் அழகான கிளியாக இருக்கும் யாஷிகா ஆனந்த்திடம் அடைக்கலம் ஆகிறார். திடீரென யாஷிகாஆனந்த் மரணிக்கிறார். அதனால் பதட்டமடைந்து அந்த மரணத்தை மறைக்கிறார் ரிச்சர்ட்ரிஷி. ஆனால் அவர் நினைப்புக்கு மாறாக நடக்கிறது.
காதல் போயின் சாதல் என்றார் பாரதி, ஜோ படத்தின் இயக்குநர் ஹரிஹரன்ராம் காதல் போயின் இன்னொரு காதல் என்று சொல்லியிருக்கிறார். கேட்கும்போது எளிதாகத் தெரியும் அல்லது மலிவாகத் தெரியும் ஆனால் பார்க்கும்போது நியாயமாகத் தெரியும் வண்ணம் படமாக்கியிருக்கிறார். நாயகன் ரியோராஜ் கல்லூரியில் சகமாணவி மாளவிகாமனோஜை காதலிக்கிறார்.அவரும் சம்மதிக்கிறார். வழக்கப்படி அந்தக் காதலுக்கு எதிர்ப்பு.
இன்றைய இளைஞர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களது வாழ்க்கைப் பாதை எவ்வாறு மாறுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகியிருக்கும் திரைப்படம் எங்க வீட்ல பார்ட்டி. ஐந்து இளைஞர்கள், இரண்டு பெண்கள் முகநூல் மூலமாகப் பழக்கமாகி ஓரிடத்தில் சந்தித்து பார்ட்டி கொண்டாடுகிறார்கள். அதில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். அவளை யார் கொலை செய்தது? கொலை செய்யக் காரணம் என்ன? என்பதைக்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன்,குய்கோ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.குய்கோ எனும் தலைப்பு, ‘குடியிருந்த கோயில்’ என்பதன் சுருக்கமாகும். இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துக்குமார், ஶ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர்
தேர்ட் ஐ சினி கிரியேசன்ஸ் (3rd Eye Cine Creations) சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், புதுமையான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சூரகன்”. இப்படத்தில், வி.கார்த்திகேயன், சுபிக்ஷா கிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், பாண்டியராஜன், வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, சுரேஷ் மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி, டேஞ்சர் மணி,
லிஃப்ட், டாடா ஆகிய இரண்டு படங்களின் வெற்றிக்குப் பிறகு எதிர்பார்ப்புக்குரிய கதாநாயகனாக உருவாகியிருக்கிறார் நடிகர் கவின்.அவர், இப்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அவற்றில் ஒன்று, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார்.இன்னொன்று நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம்.ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இவற்றில், ஸ்டார் படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத்
கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் பையா.ந.லிங்குசாமி இயக்கியிருந்த படம் இந்தப்படம் வெற்றியடைந்தது.அப்படத்தின் பாடல்கள் இன்றளவும் வரவேற்புப் பெற்றுவருகின்றன. வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம்பாகத்தை உருவாக்கும் அண்மைக்காலப் போக்குப்படி, இப்படத்தின் இரண்டாம்பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இயக்குநர் ந.லிங்குசாமியே
தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட கதை குற்றப்பரம்பரை. இக்கதையை தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குநர்களான பாரதிராஜா, பாலா ஆகியோர் படமாக்கப் போவதாகச் சொன்னார்கள். வேல ராமமூர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து பாலாவும், இரத்தினகுமார் கூறிய கதையை மையமாக வைத்து பாரதிராஜாவும் இயக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. 2016 ஆம் ஆண்டு இதனால் பரபரப்பும் சர்ச்சையும் ஏற்பட்டது. குற்றப்






















