இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் படும் துன்பத்தை சர்க்கார் திரைப்படத்தின் மூலம் உலகிற்கு உணர்த்திய நடிகர் விஜய் அவர்களுக்கும் இயக்குநர் திரு முருகதாஸ், தயாரிப்பாளர் திரு கலாநிதி மாறன் அவர்களுக்கும் நன்றி என்று பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்
உலக அளவில் புகழ்பெற்ற கூகுள் தலைமை அதிகாரி சுந்தர்பிச்சையை பிரதியெடுத்த மாதிரி சுந்தர் ராமசாமி என்கிற வேடத்தில் விஜய். அமெரிக்காவிலிருந்து இந்தியா வருகிற அவரால் இங்குள்ள பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆபத்து என்கிற அளவுக்கு நாயகனின் பெருமை பேசி. அறிமுகம் செய்கிறார்கள். அவரோ ஓட்டுப்போட வருகிறார். அவருடைய ஓட்டை யாரோ போட்டுவிட, கோபமடையும் அவர் தன் ஓட்டுரிமைக்காகப்
நடிகர் விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் நிலையில், இந்த படத்தின் எச்.டி. பிர்ண்ட் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் நேற்று பதிவிடப்பட்டது. இது பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே புதிய
விஜய் நடித்த சர்கார் படம் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அந்தப்படத்துக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. ஆனாலும் படத்தைத் தயாரித்திருப்பது சன் பிக்சர்ஸ் அல்லவா? அதனால் படத்தை மேலும் விளம்பரம் செய்யும் வகையில் சர்கார் படத்தின். சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கியிருக்கிறது சன் தொலைக்காட்சி. இன்று ஒளிபரப்பாகவிருக்கும் இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நாயகி
சர்கார் திரைப்படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்ற தமிழ் ராக்கர்சின் சவாலை முறியடிப்போம் என, தமிழ்தித்ரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியாக உள்ள சர்கார் படத்தை HD தரத்தில், இணையத்தில் வெளியிட உள்ளதாக, தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திரைத்துறையை மிரட்டியுள்ளது. இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் ராக்கர்ஸை வெற்றி பெற
விஜய் நடித்த மெர்சல் படத்தைப் பற்றி பாஜகவின் எச்.ராஜா கிளப்பிய சர்ச்சையால் அப்படம் பெரிய வசூலைப் பெற்றது. அதுபோல இப்போது சர்கார் படம் பற்றி தமிழிசை செளந்தர்ராஜன் பேசியிருக்கிறார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், சர்காருக்கு நான் எதிராக இல்லை. திரைத்துறையிலேயே மிகப்பெரும் குழப்பம் நிலவி வருகிறது. யாருடைய கருவையோ அவர்கள் எடுத்துவைத்துக்கொண்டு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நவம்பர் 6-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ‘சர்கார்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிக்காக முதலில் படத்திலிருந்து ‘சிம்டாங்காரன்’ என்ற பாடலை படக்குழு
சர்கார் படத்தின் கதைத்திருட்டு சிக்கலில் சர்கார் கதையும் செங்கோல் கதையும் ஒன்றுதான் என்று பாக்யராஜ் கூறியதால் பாதிக்கப்பட்ட வருண்ராஜேந்திரனுக்கு நீதி கிடைத்தது. இந் நிலையில் இயக்குநர் கே.பாக்ய்ராஜ் எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், போட்டி இல்லாமல் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஒப்புதலோடு என்னை நம்ம
சர்கார் படத்தின் கதை திருடப்பட்டது என்கிற வழக்கு வந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றத்தில் அது முடிவுக்கு வந்துவிட்டது. சர்கார் படமும் சுபிட்சமாக வெளிவரவிருக்கிறது. ஆனால் திரையுலக வட்டாரத்தில் குறிப்பாக உதவி இயக்குநர்கள் வட்டாரத்தில் அச்சிக்கலின் தொடர்ச்சியாகப் பல்வேறு வினைகள் இருக்கின்றன. சமூகவலைதளங்கள் மற்றும் வாட்சப் குழுக்களில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளவங்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு ராஜசேகர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் உறவினரான இவர், விவசாயத்தை மையமாக வைத்து ‘தாக பூமி’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்தக் குறும்படத்தின் கதையை மூலமாக வைத்துதான் ‘கத்தி’ படத்தை எடுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ் என்று வழக்கு தொடர்ந்துள்ளார் அன்பு ராஜசேகர். முருகதாஸ் உதவி






















