தமிழ்த்திரையுலகம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கிறது. அதற்குக் காரணம். டிசம்பர் 21-ம் தேதி வெளியீடாக ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்கமறு’, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’, விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் வெளியிட தயாரிப்பாளர் சங்கம் அனுமதி
2015 -ம் ஆண்டு வெளியான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘மாரி 2’ படம் உருவாகியிருக்கிறது. தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகும் என்று
59 நாடுகளிலிருந்து 150 படங்கள் திரையிடப்படும் 16 வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா சென்னையில் வரும் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது. இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் தேவி சினிப்ளக்ஸ், அண்ணா தியேட்டர், கேசினோ, சத்யம் சினிமாஸ், தாகூர் திரைப்பட மையம், ரஷியன் அறிவியல் மற்றும் கலாச்சார
சிவகார்த்திகேயன் இப்போது இன்றுநேற்றுநாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படமொன்றிலும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜித்து ஜில்லாடி என்கிற படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் மாறி மாறி நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். அதைத் தொடர்ந்து
இயக்குநர் பொன்ராம் இதுவரை நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். அண்மையில் அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா வெளியானது. இந்நிலையில் அவருடைய அடுத்த படம் பற்றி ஒரு தகவல் உலாவருகிறது. அடுத்த படத்தை அவர் இயக்கவில்லை. தயாரிக்கிறார் என்று சொல்கிறார்கள். உதயநிதி நடித்த பொதுவாக எம்மனசுதங்கம் படத்தை இயக்கிய தளபதிபிரபு இயக்கும் புதிய படத்தை பொன்ராம் தயாரிக்கவிருக்கிறார்
சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் இயக்கும் படமொன்றிலும் இன்றுநேற்றுநாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒருபடம் ஆகியனவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து இரும்புத்திரை பட இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ்
சிவகார்த்திகேயன் சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் ஆர் டி ராஜா தயாரிப்பில் உருவாகி , நேற்று வெளியான படம் சீமராஜா. இந்தப்படம், சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்துக் கொண்டு இருக்கிறது. முதல் நாள் வசூலே 13.5 கோடி ஆனதாக கூறப்படுகிறது. “இந்த வெற்றிக்குக் காரணமான சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒரு
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் பொறுப்பற்ற இளைஞராக ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கும் வேடத்தை சிவகார்த்திகேயனுக்குக் கொடுத்த இயக்குநர் பொன்ராம், இந்தப்படத்தில் அவரை ராஜாவாக்கியிருக்கிறார். இரட்டைக்குதிரை பூட்டிய சாரட் வண்டியில் வலம்வந்து, கும்பிடு போடுகிறவர்களுக்கெல்லாம் பணம் கொடுக்கும் வள்ளலாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவருடைய கணக்குப்பிள்ளையாக
சூர்யா, விஷால் உள்ளிட்ட பல முன்னணி நாயகர்கள் மட்டுமே ஒரு கதாபாத்திரத்துக்காக, சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து நடிப்பார்கள். ஆனால், காமெடி நடிகர்கள் யாருமே தங்களுடைய கதாபாத்திரத்துக்காக அப்படி செய்வதில்லை. தமிழ்த் திரையுலகில் முதல் முறையாக ‘சீமராஜா’ படத்துக்காக நகைச்சுவை நடிகர் சூரி, சிக்ஸ் பேக் வைத்து நடித்திருக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 13)
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் சீமராஜா படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. எங்க ராசா எப்படி வருவாரு தெரியுமா? என்று குரல் கேட்க இரட்டைக்குதிரை பூட்டிய சாரட் வண்டி ஆக்ரோஷமாக வருகிறது.அதைத் தொடர்ந்து கோயிலில் சிவகார்த்திகேயனுக்குப் பட்டம் கட்ட அவர் சிரித்துக் கொண்டே வணங்குகிறார். உடனே வாரேன் வாரேன் சீமராஜா பாடலில் சிவகார்த்திகேயன் தோன்றுகிறார்.



















