விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி,விக்ரம் நடித்த இருமுகன்,விஜய்தேவரகொண்டா நடித்த நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த்சங்கர். இவர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொன்னார்கள். அந்தப்படத்தை கே.பி.ஃபிலிம்ஸ்
கமல் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாகத் தடை பட்டிருக்கிறது. விரைவில் அதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து தலைவன் இருக்கிறான் என்றொரு படத்தில் நடிக்கப்போவதாகவும் அதுவே கடைசிப்படமாக இருக்கலாம் என்றும் கமல் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இவ்விரு படங்களைத் தாண்டி இன்னொரு படத்தில்
இயக்குநர் நடிகர் சசிகுமார் கடந்த பத்தாண்டுகளாகத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவருடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில், 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி சசிகுமார் தயாரித்து இயக்கிய ஈசன் படம் வெளியானது. அதன்பின், சமுத்திரக்கனி இயக்கிய போராளி, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன், பாலுமகேந்திரா இயக்கி நடித்த தலைமுறைகள், பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் 2 படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது.இந்தப்படத்தின் தயாரிப்பாளரும் விஷால்தான். இலண்டனில் படப்பிடிப்பு முடிந்து சில வாரங்கள் ஆகியும் அப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு குறித்து எந்தச் செய்தியும் இல்லை. விஷால் சக்ரா படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் என்பதால் இந்தப்படத்தின் வேலைகள் நடக்கவில்லை என்று
பாகுபலி வெளியானதிலிருந்தே அரசல் புரசலாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்த ஒரு விசயம் இப்போது நடைமுறைக்கு வரவிருக்கிறது என்கிறார்கள். ஆம், அப்போதிருந்தே பாகுபலி இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. அது இப்போது உறுதியாகிவிட்டதாம். சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் முடிவடைந்ததும் ராஜமெளலி இயக்கும் படத்தைத் தொடங்கத்
அஜித் நடித்த வாலி படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய எஸ்.ஜே.சூர்யா ‘நியூ’ மூலம் கதாநாயகன் ஆனார். தன்னுள் இருந்த இயக்குநரை ஓரம்கட்டி, நடிகரை புதுப்பித்துக்கொண்டு வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. மெர்சலில் விஜய்க்கு வில்லனாக மிரட்டியவர். இறைவி படத்தில் தன்னுள் இருந்த கலைஞனை வெளிக்கொண்டு வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். சமீபத்தில் ‘மான்ஸ்டர்’ என்று
இலங்கை மட்டைப்பந்தாட்ட அணியின் முன்னணி வீரராக இருந்து ஓய்வு பெற்றவர் முத்தையா முரளிதரன். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர். தற்போது இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மஹிந்த ராஜபக்சேவின் சகோதரரான கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முரளிதரன் எடுத்துள்ளார். இந்த நிலையில் கொழும்புவில் நேற்று கோத்தபாய ராஜபக்ச ஏற்படுத்திய வியத்மக என்ற அமைப்பின் சார்பில்
சுந்தர். சி தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடித்த ‘மீசையை முறுக்கு’ படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப்படத்தை நாயகன் ஆதியே இயக்கியிருந்தார். அதையடுத்து அதே கூட்டணியில் உருவான படம் ‘நட்பே துணை’. இந்தப் படம் ஏப்ரல் 4, 2019 அன்று வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப்படத்தை புது இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்கியிருந்தார். இந்நிலையில் எவ்வித அறிவிப்பும்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் மே 1 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அடுத்து இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். இது பற்றிய அதிகாரப்பூர்வ
விஜய்,அஜீத்,பிரபுதேவா,ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரை இயக்கிய எழில் இப்போது ஜி.வி.பிரகாஷை இயக்கவிருக்கிறார். பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ்.பி.பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ். இந்த நிறுவனம் தற்போது சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக்























