இரண்டு பாகங்களாகத் தயாரான படம் பொன்னியின்செல்வன். முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இந்தப்படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. முதல்பாகத்தை முடிக்கும்போதே இரண்டாம்பாகத்தையும் இறுதி செய்துவிட்டார் மணிரத்னம். அதை அப்படியே வெளியிட்டுவிடுவதுதான் திட்டம். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில்
கார்த்தி இப்போது நடிக்கும் படம் ஜப்பான். ராஜுமுருகன் இயக்கும் அந்தப்படத்தை டிரீம்வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் இந்தப்படத்துக்கு அடுத்து கார்த்தி இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். சர்தார் படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில்
2007 ஆம் ஆண்டு நாயகனாக அறிமுகமானதிலிருந்து சனரஞ்சகமான, அதே நேரம் வித்தியாசமான படங்கள் மூலம் இரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கார்த்தி. 2022 ஆம் வருடத்தில், விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய அடுத்தடுத்த தொடர் வெற்றிப் படங்களுடன் வாகை சூடியுள்ள கார்த்தியின் 25 ஆவது படம் இன்று தொடங்கியுள்ளது. ராஜுமுருகன் இயக்கும் அந்தப்படத்தின் பெயர் ஜப்பான்.
பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்காக நவம்பர் 5 ஆம் தேதியன்று ஒரு மாபெரும் விருந்து வைத்தார் லைகா நிறுவனர் சுபாஸ்கரன். நட்சத்திர விடுதியொன்றில் நடந்த அவ்விருந்தில், பொன்னியின்செல்வன் படக்குழுவினர் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். மதுவிருந்து என்றாலே பல சிக்கல்கள் உருவாகும். அதேபோல் அவ்விருந்திலும் நடந்துவிட்டதாம். மதுபோதையில் ஒரு பெரியவர்
சூது கவ்வும்,காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. அவற்றைத் தொடர்ந்து அவர் இயக்கவுள்ள புதியபடத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. முன்னதாக, இந்தப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. ஒரு திரைப்பட நிகழ்ச்சி மேடையில், ஆர்யா நடிப்பில் நலன்குமாரசாமி இயக்கும் படத்தை விரைவில்
இந்திய இராணுவத்தில் இரகசிய உளவாளியாகப் பணியாற்றிய அப்பா சர்தார் தேசத்துரோகி பட்டத்துடன் காணாமல் போகிறார். அவருடைய மகன் காவல்துறையில் சேர்ந்து நன்றாகப் பணியாற்றினாலும் அப்பாவின் கெட்டபெயர் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா? சர்தார் என்னவானார்? என்கிற கேள்விகளுக்கான விடைதான் சர்தார். இராணுவ உளவாளி, காவல்துறை அதிகாரி ஆகிய இரட்டை வேடங்களுக்கும்
தமிழ்த் திரையுலகில் இரசிகர்களின் இரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு விழுக்காடு பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார். கமர்ஷியல் படங்களுக்கு என்றுமே இரசிகர்களிடம் வரவேற்பு குறைந்ததில்லை.என்ன ஒன்று, அதை இரசிகர்களின் பல்ஸ் அறிந்து கொடுக்க வேண்டும். அவ்வளவுதான்.
இவ்வாண்டு தீபாவளிப்பண்டிகை அக்டோபர் 24 திங்கட்கிழமையன்று வருகிறது. அதையொட்டி பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள சர்தார், அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. அப்படங்கள் மூன்று நாட்கள் முன்னதாகவே அதாவது அக்டோபர் 21 வெள்ளிக்கிழமையே வெளியாகவுள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து, கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, மித்ரன் இயக்கி வெற்றி பெற்ற இரும்புத்திரை படத்திற்கு பிறகு,பேங்கிலிருந்து செல்லில் ஒரு குறுஞ்செய்தி வந்தாலே பயமாக இருந்தது. நெஞ்சை அடைத்தது போல் பகீர் என்று
இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம், செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்பட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும்,





















