சர்தார் படத்துக்கு அதிக திரையரங்குகள் – தயாரிப்பாளர் மகிழ்ச்சி
தமிழ்த் திரையுலகில் இரசிகர்களின் இரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு விழுக்காடு பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார்.
கமர்ஷியல் படங்களுக்கு என்றுமே இரசிகர்களிடம் வரவேற்பு குறைந்ததில்லை.என்ன ஒன்று, அதை இரசிகர்களின் பல்ஸ் அறிந்து கொடுக்க வேண்டும். அவ்வளவுதான்.
அந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி தீபாவளி வெளியீடாக நாளை (அக்டோபர்-21) வெளியாகும் சர்தார் படத்தை அப்படி ஒரு புல் மீல்ஸ் ஆக இரசிகர்களுக்கு வழங்கத் தயாராக இருக்கிறது பிரின்ஸ் பிக்சர்ஸ்.
கார்த்தியின் இரட்டைவேடம், ராஷி கண்ணா, ரஜிஷா விஜயனின் வண்ணமயமான சேர்க்கை, இருக்கையில் அமர்ந்ததுமே இரசிகர்களைக் கதையோட்டத்திற்குள் இழுத்துச் செல்லும்.அதோடு ஜி.வி பிரகாஷின் இசை இரசிகர்களின் முழு திருப்திக்கு நான் கியாரண்டி என்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன்.
அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே சர்தார் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியதால் இந்தப் படத்தின் வியாபாரத்திலும் அது பெரிய அளவில் எதிரொலித்துள்ளது.
குறிப்பாக அதிக அளவிலான திரையரங்குகள் இந்தப் படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் தீபாவளி பந்தயத்தில் சர்தார் முன்னிலையில் இருக்கிறது.
அழகான தரமான எண்டெர்டெய்ன்மெண்ட் படங்களைத் தொடர்ச்சியாக மக்களின் பார்வைக்குத் தந்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ், அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் கைகோர்த்து இன்னும் பிரமிப்பூட்டும் படைப்புகளைத் தர இருக்கிறது என்கிறார் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார்.











