Home Posts tagged Film Review (Page 9)
விமர்சனம்

எட்டுத்திக்கும் பற – திரைப்பட விமர்சனம்

சில ஆண்டுகளுக்கு முன் தர்மபுரியைச் சேர்ந்த இளவரசன் திவ்யா காதல் திருமணம் மற்றும் அதையொட்டி நடந்த நிகழ்வுகளின் காட்சி வடிவமாக இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் வ.கீரா. அதை மட்டும் நேரடியாகச் சொல்லிவிடாமல், வெவ்வேறு வயது, வெவ்வேறு மதம், வெவ்வேறு வர்க்கம் ஆகிய பின்புலங்
விமர்சனம்

ஜிப்ஸி – திரைப்பட விமர்சனம்

மதச்சார்பற்ற நாடு என்று அரசியல் சாசனத்தில் சொல்லிக் கொண்டு அதற்கு நேரெதிராக எல்லாவற்றையும் மத அடிப்படையில் அணுகும் ஆபத்தான போக்கில் இந்தியா இருக்கும் நிலையில் மனிதம் தாண்டிப் புனிதம் இல்லை என்பதை ஓங்கிச் சொல்ல வந்திருக்கிறது ஜிப்ஸி. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்து அப்பாவுக்கும் இஸ்லாமிய அம்மாவுக்கும் பிறந்த குழந்தை ஜிப்ஸி. பாகிஸ்தான்காரர்கள் போட்ட குண்டில் பெற்றோர் இறந்துவிட
விமர்சனம்

மாஃபியா – திரைப்பட விமர்சனம்

போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தைக் கண்டுபிடித்துக் களையெடுக்கும் காவல் அதிகாரி என்கிற ஒற்றைவரிக்கதையை உருவாக்கத்தில் வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக்நரேன். போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரி வேடத்தில் வருகிற அருண்விஜய், அதற்குக் கொஞ்சம் கூடுதலாகவே உழைத்திருக்கிறார். அவருடைய தோற்றமே இவர் எதையும் செய்துவிடுவார் என்று சொல்லிவிடுகிறது.இரண்டாவது தோற்றத்தை
விமர்சனம்

காட் ஃபாதர் – திரைப்பட விமர்சனம்

அன்பான கணவன் மனைவி ஓர் அழகான குழந்தை, நல்ல வேலை சொந்தவீடு என்று மகிழ்ச்சியாக வாழும் நடுத்தர குடும்பத்துக்குள் ஒருநாள் பெரும்புயல் வீசுகிறது. அது அக்குடும்பத்திலுள்ள அழகான குழந்தையைக் காவு கேட்கிறது. அந்த சாதாரண குடும்பம் அவ்வளவு பெரும்புயலை எப்படி எதிர்கொள்கிறது? என்பதைப் படபடப்புடன் சொல்லியிருக்கும் படம்தான் காட்ஃபாதர். நடுத்தர குடும்பத்தலைவன் வேடத்துக்கு மிகச் சரியாக
Uncategorized

தர்பார் – திரைப்பட விமர்சனம்

மும்பையில் 17 காவல்துறையினரை உயிரோடு எரித்துக் கொன்று விடுகிறார் ஒரு தாதா. அதனால் மும்பையில் காவல்துறை வேலைக்கு வரவே பலரும் அச்சப்படுகிறார்கள்.  அந்த பயத்தைப் போக்கி மீண்டும் காவல்துறைக்கு மரியாதை ஏற்படுத்தித் தர மும்பை மாநகரக் காவல் ஆணையராகப் பொறுப்பேற்கிறார் ரஜினிகாந்த். அவர் மும்பை வந்ததும் தொடங்குகிற அதிரடி அட்டகாசங்கள் படம் முடியும்வரை தொடருகின்றன. காவல்துறை
விமர்சனம்

கேடி (எ) கருப்புதுரை – திரைப்பட விமர்சனம்

தமிழகத்தின் தென்பகுதியில் சில இடங்களில், வயது முதிர்ந்தவர்களைக் கருணைக்கொலை செய்துவிடும் வழக்கம் இருந்திருக்கிறது. தலைக்கூத்தல் என்று சொல்லப்படும் அந்நிகழ்வு எல்லோருக்கும் தெரிந்தே நடக்கும். அதைச் செய்துவைக்கவே ஆட்களும் இருந்திருக்கிறார்கள். இந்நிகழ்வை மையமாகக் கொண்ட படம்தான் இது. மூன்று மகன்கள், இரண்டு மகள்களைக் கொண்ட முதியவர், மனைவியை இழந்தவர், எண்பது வயது ஆனவர்
விமர்சனம்

நம்ம வீட்டுப் பிள்ளை – திரைப்பட விமர்சனம்

பாரதிராஜாவின் பேரன், அர்ச்சனாவின் மகன், ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என முழுக்க முழுக்க உறவுகளை நேசிக்கும் குடும்பப் பொறுப்புள்ள இளைஞன் சிவகார்த்திகேயன். தந்தை இல்லாமல் தாய் மற்றும் தாத்தாவால் வளர்க்கப்படுகிறார். அவருடைய பெரியப்பா வேலராமமூர்த்தி,சித்தப்பா பஞ்சு சுப்பு உள்ளிட்டோர் அவருக்கு எதிர்ப்பு.  இந்தச் சூழலில், தங்கை திருமணம் அதனால் வரும் சிக்கல்கள் அதிலிருந்து அவர்
விமர்சனம்

சூப்பர் டூப்பர் – திரைப்பட விமர்சனம்

சின்னச் சின்ன தப்புகளைச் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள் நாயகன் துருவாவும் அவரது மாமா ஷாராவும். அதன் தொடர்ச்சியாக நாயகி இந்துஜாவைக் கடத்திப் பணம் பறிக்க முயல்கிறார்கள்.  பணம் கேட்கப்போகும்போது இந்துஜாவின் அப்பா கொல்லப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்து அது தொடர்பாகத் துப்புத்துலக்குகிறார் துருவா. அவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? நாயகியைப் பார்த்ததும் காதல் கொள்வதால் இந்த வேண்டாத
விமர்சனம்

ஏ 1 – திரைப்பட விமர்சனம்

நாயகி தாரா அலிசா பெர்ரி, அய்யங்காராத்துப் பெண் அவரைக் காதலிக்க ஏராளமானோர் போட்டி போடுகிறார்கள். அவருக்கோ யாருக்கும் பயப்படாத ஒரு ரவுடியைக் காதலித்துக் கல்யாணம் செய்யவேண்டும் என்று ஆசை. அந்த ரவுடியும் அய்யங்காராக இருக்கவேண்டும் என்பது ஒரே நிபந்தனை. அப்படிப்பட்ட நாயகி ஒரு சந்தர்ப்பத்தில்,புரட்டாசி மாதம் பெருமாளைக் கும்பிட நெற்றியில் நாமமிட்ட நாயகன் சந்தானத்தைப் பார்த்து
விமர்சனம்

சிந்துபாத் – திரைப்பட விமர்சனம்

தென்காசியில் திருடுவதைத் தொழிலாகக் கொண்ட விஜய்சேதுபதி, நிஜத்தில் அவர் மகனும் கதையில் அவருடைய நண்பருமான சூர்யா விஜயசேதுபதி அவருடைய கூட்டாளி. ஒரு கட்டத்தில் நாயகி அஞ்சலியைப் பார்த்தவுடன் காதல் கொள்கிறார் விஜயசேதுபதி. முதலில் மோதல் பிறகு காதல். அதன்பின் அதிரடிக் கல்யாணம். இவற்றிற்குப் பின், தாய்லாந்தில் கொத்தடிமையாகச் சிக்கிக் கொண்ட மனைவி அஞ்சலியைக் காப்பாற்றி மீட்டுவர