கால்டாக்ஸி ஓட்டுநரைக் கொலை செய்துவிட்டு வண்டியுடன் கொலைகாரர்கள் தப்பியோட்டம் என்று அவ்வப்போது செய்திகளில் பார்ப்போம். ஏன் அப்படி நடக்கிறது? கடத்தப்படும் வண்டிகள் என்னவாகின்றன்? என்பதையெல்லாம் ஒரு கதையாக்கி அதற்குள் காதல், பாசம் ஆகியனவற்றைக் கலந்து திரைக்கதையாக்கி எடுக்கப்பட்டிருக்கும் படம் கால்
நட்புக்குள் துரோகம் நுழைந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதைச் சொல்லும் இன்னொரு படம். ராசுரஞ்சித்,ஈசன்,சந்தீப்ராஜ் ஆகியோர் சின்னச்சின்ன திருட்டுகளில் ஈடுபடுகிறவர்கள். ஒரு திருட்டின்போது ராசுரஞ்சித்தும் ஈசனும் காவல்துறையில் மாட்டிக் கொள்கிறார்கள். சந்தீப்ராஜ் தப்புகிறார். சிறையில் இருந்து இருவரும் வெளிவந்தபின்பும் சந்தீப்ராஜின் துரோகத்தால் நண்பர்கள் வாழ்க்கையே
அருண்பாண்டியன் ஆயுள்காப்பீட்டுக்கழக முகவராக இருக்கிறார். மனைவி இல்லை. ஒரே ம்கள். செவிலியர் படிப்பு முடித்துவிட்டு வெளிநாடு சென்று பணம் சம்பாதித்து அப்பாவின் கடனை அடைத்தாக வேண்டும் என்கிற இலட்சியத்துடன் இருக்கிறார். பகுதி நேரமாக ஒரு கோழி உணவுக் கடையில் வேலை பார்க்கிறார். பார்ப்போர் கண்படுகிற மாதிரி அன்பான அப்பா மகளாக இருக்கும் அவர்களுக்கிடையே ஒரு சின்ன விரிசல். அந்த
விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை மற்றும் அவர்களுடைய போராட்டங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட தறியுடன் என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் சங்கத்தலைவன். கருணாஸ் சுனுலட்சுமி உள்ளிட்டோர் விசைத்தறிக் கூடத்தில் வேலை பார்க்கிறார்கள். அவர்களுடன் பணிபுரியும் பெண்ணுக்கு விபத்து நேர்ந்து ஒரு கையை இழக்கிறார். அதற்கு சரியான இழப்பீடு கேட்டுப் போராடுகிறது சங்கம்.
திரைப்படங்களில் காதலுக்கு இதுவரை தெய்வீகக் காதல் புனிதக்காதல் அமரகாவியம் என்பன உட்பட பல்வேறு முலாம்கள் பூசப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் அடித்து உடைத்திருக்கிறது கேர் ஆஃப் காதல். வேலு (நிகேஷ் சுனிதாவின்(சுவேதா)) வின் பள்ளிப்பருவ ஈர்ப்பு, ஜோசப் (கார்த்திக் ரத்னம்) பார்கவியின் (ஐரா) பதின்பருவக் காதல் தாடி (வெற்றி), சலீமாவின் (மும்தாஜ்சர்கார்) இளம்பருவக் காதல்,
பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றதுடன், கட் ஆஃப் மதிப்பெண்ணாக 196.5 பெற்றிருந்தவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா. இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த அனிதா மருத்துவப்படிப்பில் சேரமுடியவில்லை. காரணம், நீட் எனும் புதியதேர்வு முறைதான். அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார். 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடந்த இக்கொடும்
கல்லூரிப் பேராசிரியராகச் சென்னையில் பணிபுரியும் விஜய், நாகர்கோயிலில் இருக்கும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு ஆசிரியராகச் செல்ல வேண்டிய கட்டாயம். போனபின் அங்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் பொங்கியெழுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்லுவதுதான் மாஸ்டர். வித்தியாசமான வேடங்களை ஏற்காமல் ஒரேமாதிரியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டைப்
கொஞ்சம் கொஞ்சமாக அருகிக் கொண்டிருக்கும் உறவுகள் மீதான அன்பு, மூத்தோருக்கு மரியாதை உள்ளிட்ட உணர்வுகளை மீட்டெடுக்கும் படைப்பாக வந்திருக்கிறது சியான்கள். நாயகனாக நடித்திருக்கும் கரிகாலன் ஏற்றிருக்கும் பாத்திரத்துக்குப் பொருத்தமான புதுவரவு. காதல் காட்சிகளில் இன்னும் முன்னேறவேண்டும். நாயகி ரிஷாஹரிதாஸ் அளவான அழகு. கண்களால் காதலைச் சொல்லுமிடம் நன்று. நளினிகாந்த், பசுபதிராஜ்,
கோவாவின் அழகிய கடற்கரையோரம் இருக்கும் பெரிய வீட்டிற்கு கணவர் அகால மரணமடைந்த சோகத்துடனும் அம்மா,தங்கை மற்றும் ஆசைமகளுடன் வந்து குடியேறுகிறார் நாயகி பிரியங்கா. அவர் ஏழுமாத கர்ப்பிணி என்பது கூடுதல் தகவல். அழகு என்றாலும் ஆபத்து நிறைந்திருக்கிறது அந்த வீட்டில்.அங்கு ஒரு பேய் இருக்கிறது. அதனால் பல சிக்கல்கள்.அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? கடைசியில் என்ன நடக்கிறது? என்பதைத்
மென்பொருள் பொறியாளராக நல்ல சம்பளம் வாங்கும் நாயகன் ராம்குமார் சுதர்ஷன் அந்த வேலையை விட்டுவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்க முடிவு செய்கிறார். அவருக்கு நண்பன் அஷ்வின்குமார் உதவி செய்கிறார். நாயகி நிவேதா சதிஷுடன் இணைந்து இணையதள வானொலி தொடங்குகிறார்கள்.அதற்கு சாம்ஸ் உதவி செய்கிறார். வெறும் பொழுதுபோக்கு மட்டுமின்றி சமுதாய அக்கறையோடு இவர்கள் செய்யும் நிகழ்ச்சி பல சிக்கல்களை




















