சின்னச் சின்ன திருட்டுகள் செய்யும் யோகிபாபு ஒரு கட்டத்தில் பேய் ஓட்டுகிறவர் எனப் பொய் சொல்லி ஒரு பெரிய பங்களாவுக்குச் செல்கிறார். அங்கு பேய்களிடம் மாட்டிக் கொள்ளும் அவரும் அவருடைய குழுவினரும் எப்படித் தப்பிக்கிறார்கள்? அந்தப் பேய்கள் பேய்களானது எப்படி? போன்ற கேள்விகளுக்கு விடைதரும் படம்
ஒரு சில படங்கள் எதிர்பாராத கதையம்சத்துடன் வந்து திகைக்க வைக்கும். அந்த வரிசையில் வந்திருக்கிறது சின்னஞ்சிறு கிளியே. உலகத்தை ஆட்டிப்படைப்பவர்களின் முதன்மையானவர்கள் மருந்து நிறுவனக்காரர்கள். அவர்கள் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதைக் காட்டிலும் நோயை உருவாக்கும் கிருமிகளை முதலில் உருவாக்கி அதைப் பரப்பிவிட்டு, பின்பு அதற்கு மருந்து கண்டுபிடித்து வியாபாரத்தை விருத்தி
சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தின் பெயர் பங்காளியூர். அந்த ஊரில் மருந்துக்குக்கூட மாமன் மைத்துனர் கிடையாது. எல்லோருமே பங்காளிகள்தாம். அனைவருமே ஒருவருக்கொருவர் பகையாளிகள். அதாவது ஒருவரின் வீடு தீப்பற்றி எரிந்தால் அதற்காகத் தீயணைப்பு வண்டியை அழைக்காமல் ஏமாற்றி வீடு முழுமையாக எரியும்வரை வேடிக்கை பார்ப்பவர்கள். இன்னொருபுறம், ஒட்டுமொத்த ஊரின் வேலையே பில்லிசூனியம் செய்வது,
தென்தமிழகத்தின் ஒரு கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளைக் கதை மாந்தர்களாக வைத்துக் கொண்டு உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல்வரை அலசி ஆராய்ந்து துவைத்துத் தொங்கப்போட்டிருக்கும் படம் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும். நாயகன் மிதுன்மாணிக்கம், நாயகி ரம்யாபாண்டியன் ஆகிய இருவரும் பெற்ற பிள்ளைகள் போல் வளர்க்கும் கறுப்பன் வெள்ளையன் ஆகிய இரு காளை மாடுகள் திடீரெனக் காணாமல் போகின்றன.
தமிழீழத்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஆயுதப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. அந்த இறுதிப்போரின் போது இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அப்படிச் சரணடைந்தவர்களின் நிலை என்ன? பனிரெண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர்கள் நிலை என்ன? என்பதை சிங்கள அரசாங்கம் சொல்ல மறுக்கிறது. சரணடைந்தவர்களைக்
காலப்பயணம் (டைம் டிராவல்) சென்று தன் வாழ்க்கையைக் கண்டறியும் ஒரு சாமானியனின் கதைதான் டிக்கிலோனா. ஃபேண்டசி டிராமா என்று சொல்லப்படும் வகையில் உருவாகியிருக்கிறது. நாயகன் சந்தானத்துக்கு ஒன்றல்ல மூன்றுவேடங்கள்.2027 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டுக்கு வந்து வந்து போகிறார் சந்தானம். ஏழாண்டுகளில் தோற்றத்தில் சின்ன மாற்றம் கூட இல்லை என்பது அடடாவா அலட்சியமா? பைத்தியத்துக்கு
படம் தொடங்கும்போதே ஒரு சுமையுந்தில் வந்திறங்குகிறார் விஜய்சேதுபதி. அவரை இறக்கிவிட்ட பின் ஓட்டுநர், முடிஞ்சா பார்க்கலாம் என்று சொல்ல அதற்கு, முடியும் பார்க்கலாம் என்று அதீத தன்னம்பிக்கையோடு சொல்கிறார் விஜய்சேதுபதி. படம் முழுக்க இது தொடர்கிறது. மிக ஆழமான விசயங்களை அழுத்தந்திருத்தமாகச் சொல்லிச் செல்கிறார்கள். பக்கிரி என்கிற பெயருக்கேற்ப தாடி மீசையோடு அறிமுகமாகும் விஜய்சேதுபதி
கவசம், சதியாடல், தப்பாட்டம்,பந்தயம், அறம் பற்ற, அக்கற ஆகிய ஆறு தலைப்புகளில் தனித்தனிக் கதைகள் அவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்தால் ஒரே கதை. அதுதான் கசடதபற. கவசம் கதையில் பிரேம்ஜிதான் கதாநாயகன், அவருக்கு இணை ரெஜினா. இவர்களோடு யூகிசேதுவும் இருக்கிறார். இவர்கள் மூவரை மட்டும் வைத்துக் கொண்டு சுவையாகக் கதை சொல்லியிருக்கிறார் சிம்புதேவன். ரெஜினாவுக்கு பிரேம்ஜி மீது காதல் வரக்
ஒரு கொலை நடக்கும், அதைச் செய்தது யார்? என்கிற விசாரணை நடக்கும், அதில் பல பேர் மீது சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டு கடைசியில் புதிதாக ஒருவரைச் சொல்லி இவர்தான் அந்தக் கொலையைச் செய்தார் என்று முடிக்கும் படங்களின் வரிசையில் சேரக்கூடிய படம்தான் திட்டம் இரண்டு என்றாலும் இப்படத்தில் முடிச்சு அவிழ்க்கப்படும் இடம் யாரும் எதிர்பாராதது, இதுவரை திரைப்படங்களில் வராதது. காவல்துறை ஆய்வாளர்
பிறக்கும்போதே அம்மாவை இழக்கும் கார்த்தி, அம்மா போல் தன்னை வளர்த்தவர்களைப் பாதுகாக்கப் போராடுவதுதான் சுல்தான். வழக்கமான அட்டகாசச் சிரிப்புடன் அறிமுகமாகும் கார்த்தி, படம் முழுக்க இறங்கி விளையாடியிருக்கிறார். இடைவேளை நேரத்தில் வருகிற சண்டைக்காட்சியில் விஸ்வரூபம் எடுத்து மிரள வைக்கும் அவர் நாயகி ராஷ்மிகாவைப் பார்த்து மிரளும்போது ரசிக்க வைக்கிறார்.ஒரு பெரும்பழியைச் சுமந்து




















