தமிழ்நாட்டின் காவல்துறைத்தலைவர் அதாவது டிஜிபி மதுபாலா.அவருடைய மகள் ஸ்முருதிவெங்கட். அவர் ஒருநாள் திடீரென கடத்தப்படுகிறார். அவரைக் கண்டுபிடிக்க ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்கிறார் மதுபாலா. அந்தச் சிறப்பு அதிகாரி நாயகன் அருள்நிதி. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சுவாரசியமாகச் சொல்ல
ஒரே கல்லூரியில் படிக்கும் நடுத்தர வர்க்கப் பையனுக்கும் அதே கல்லூரியில் படிக்கும் பணக்காரப் பெண்ணுக்கும் காதல். அதனால் என்னவெல்லாம் நடக்கும்? எனும் அரதப் பழசான கதையில் புதிதான ஒரு இறுதிக்காட்சியைச் சேர்த்திருக்கும் படம் நதி. நாயகனாக நடித்திருக்கும் சாம்ஜோன்ஸ், நடுத்தர வர்க்க இளைஞன் வேடத்துக்கேற்ப பொருத்தமாக இருக்கிறார். காதல் மற்றும் சண்டைக் காட்சிகளில் இன்னும்
பல ஆண்டுகளாகப் பூட்டிக்கிடக்கும் ஒரு மருத்துவமனைக்குள் சில மாணவ மாணவிகள் செல்கின்றனர். பேய் இருக்கிறதா? இல்லையா? என்பதை மக்களுக்குச் சொல்வதற்காக அனைவரும் ஒளிப்பதிவுக் கருவிகளுடன் அதற்குள் செல்கின்றனர். அங்கு நடப்பவற்றை நேரலையாக ஒளிபரப்பும் செய்கின்றனர். அங்கு என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைப் பயத்துடன் பார்க்க வைத்திருக்கிறார்கள். தேங்காய்சீனிவாசன் பேரன் யோகி, சரண்ராஜ் மகன்
அரைத்த மாவையே அரைக்கிறார்கள் என்கிற விமர்சனங்களைப் பெற்றுவரும் திரைத்துறையில் அவ்வப்போது சில மாறுபட்ட கதைகள் வந்து ஆசுவாசப்படுத்தும். அந்தவகையில் வந்திருக்கும் மலையாளப்படம் மகாவீர்யர். மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர் அப்ரித் ஷைனி இயக்கத்தில் நிவின்பாலி, ஆஷிப் அலி, லால், ஷான்விஸ்ரீவத்சவா, சித்திக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மக்களாட்சியைக்
ஒரு சாதாரண நடுத்தர வர்க்கப் பெண்மணி, அரசதிகாரம், அரக்கர்களெனத் தோரும் ஊடகத்துறை, திடீரென முளைத்த கொலைவெறி கொண்ட எதிரிகள் மற்றும் உறவுகள் ஆகியனவற்றுக்கெதிராகப் போராடுவதை மிக மிக எதார்த்தமாகச் சொல்லியிருக்கும் படம்தான் கார்கி. பள்ளி ஆசிரியையான சாய்பல்லவிக்கு திருமணம் நிச்சயமாகிறது. திருமணக் கனவுகளுடன் இருக்கும் அவர் வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும் எதிர்பாராத நிகழ்வு மொத்த
பாலியல் சீண்டல்கள் பெண்குழந்தைகளுக்கு மட்டுமன்று ஆண்குழந்தைகளும் அதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் சொல்லி அதன் விளைவுகள் என்னென்ன? என்பதையும் உளவியல் ரீதியாக அணுகி கதை சொல்லியிருக்கிறார் பார்த்திபன். உலகில் முதன்முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்கிற பெருமையுடன் வெளியாகியிருக்கும் இரவின்நிழல் படத்தில் பார்த்திபன் இரவாகவும் நிழலாகவும் இருக்கிறார். அவருடைய
சென்னையில் மருத்துவம் படித்துவிட்டு மதுரை அரசு பொதுமருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றப் போகிறார் நாயகன் ராம். அங்கு மதுரையையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் குரு என்றழைக்கப்படுகிற ஆதியுடன் மோதல். அதனால் ஆதி, நாயகன் ராமை அடித்துத் துவைத்து பொதுஇடத்தில் காயப்போட்டுவிடுகிறார். அங்கிருந்து தப்பிச்செல்லும் நாயகன் என்ன செய்கிறார்? எப்படிச் செய்கிறார்? என்பதைச்
மருத்துவத்துறையில் நடக்கும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் படங்கள் அவ்வப்போது வரும். அந்த வரிசையில் தற்போது வந்திருக்கும் படம் வாட்ச். கேலிச்சித்திரக் கலைஞராக இருக்கும் நாயகன் கிரிஷின் மகிழுந்தில் ஏறி இறங்கும் ஒரு பத்திரிகையாளர் மூலம் மிகப்பெரிய மருந்து ஊழல் பற்றிய தகவல் தெரிகிறது. நாயகன் ஒரு இராணுவ வீரரின் மகன் என்பதால் நாட்டைக் காக்கும் எண்ணத்துடன் போலிமருந்து
ஃபாரின்சரக்கு என்றால் வெளிநாட்டு மதுவகை என்பதுதான் நேரடி மொழிபெயர்ப்பு. ஆனால் இந்தப்படத்தில் அதற்குப் புதுஅர்த்தம் சொல்லியிருக்கிறார்கள். குஜராத் அமைச்சர் ஒருவரின் மகன் இரகசியமாக தமிழகத்துக்கு வருகிறார். தமிழக அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் அவரைப் பத்து நாட்களுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு ஒரு ரவுடிக்கூட்டத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அதே சமயம், குஜராத்
இந்த உலகம் மாந்தர்களுக்கானது மட்டுமன்று உயிர்களுக்கானது என்கிற உலகப்புகழ்பெற்ற சுற்றுச்சூழல் சொல்லாடல் உண்டு. அந்தச் சொற்களுக்கு உயிர்கொடுக்கும் படமாக அமைந்திருக்கிறது 777 சார்லி. படத்தில் 777 சார்லி என்கிற பெயரில் நடித்திருக்கும் நாய், பார்ப்போர் உள்ளங்களைக் கொள்ளை கொள்வது உறுதி. நவரசங்களையும் அந்நாய் வெளிப்படுத்தியிருக்கிறது என்றால் நம்புவது சிரமமாக இருக்கும்,




















