பயமுறுத்தும் பேய்களுக்கு மத்தியில் சிரிக்க வைக்கும் பேய்களைக் காட்டி குழந்தைகளைக் கவர்ந்த ராகவா லாரன்ஸ், காஞ்சனா 3 படத்திலும் அதே பாணியைக் கையாண்டிருக்கிறார். பேய்க்கு பயப்படும் லாரன்ஸ் உடலிலேயே பேய் புகுந்துகொண்டால் எப்படி இருக்கும்? என்பதுதான் இந்தப்படமும். லாரன்சின் நிஜ வாழ்க்கை போலவே
சென்னையில் திறம்படச் செயலாற்றும் காவல்துறை அதிகாரி விவேக். ஓய்வுக்காக அமெரிக்காவிலுள்ள மகன் வீட்டுக்குச் செல்கிறார். ஓய்வுக்காகச் சென்றிருந்தாலும் அங்கு நடக்கும் குற்றச்செயல்கள் அவருடைய காவல்துறை புத்தியை உசுப்புகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படம். திரையில் வந்தவுடன் சிரிக்க வைக்கும் விவேக், இந்தப்படத்தில் எடுத்தவுடனே கத்தியோடு வந்து ஒரு உயிரை
எல்லாப்படங்களிலும் காதல் இருக்கிறது. அவையெல்லாம், காதல் போயின் சாதலா? இன்னொரு காதல் இல்லையா? என்று கடந்து போய்க்கொண்டே இருக்கின்ற காதலாக இருக்கும். இந்தப்படம், காதலில் தொடங்கி காதலில் வாழ்ந்து காதலில் உறைந்த ஓர் காதலனின் கதை. வடநாட்டிலிருந்து கொடைக்கானலுக்கு சர்க்கஸ் நடத்த வருகிறது மெஹந்தி சர்க்கஸ் குழு. அக்குழுவில் இடம்பெற்றுள்ள இளம்பெண்ணைப் பார்த்ததும் கொடைக்கானலில்
தெலுங்கில் வெற்றி பெற்ற படத்தைத் தமிழில் எடுத்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் கதை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் பார்த்த கதை. கதைப்படி இலட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கு வாரிசு என்பதால் படத்தின் பெயருக்கேற்ப ராஜாவாகவே வாழ்ந்திருக்கிறார் சிம்பு. அறிமுகக் காட்சியிலேயே அவருடைய அதிரடி தொடங்குகிறது படமெங்கும் அது தொடர்கிறது. கடைசிக்காட்சியில் உருக்கமாகப் பேசி
நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமையாகி, பணம் ,பதவி, மற்றும் ஆடம்பர வாழ்வை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் உறவுகளின் மேன்மையை எடுத்துச் சொல்கிற படம் அறுபது வயது மாநிறம். அல்சைமர் எனும் நினைவிழத்தல் குறைபாட்டில் சிக்கிய அப்பாவைத் தொலைத்துவிட்டுத் தேடுகிற அமெரிக்கக் கனவு காணும் மகனை வைத்துக் கொண்டு கதை சொல்கிறார்கள். நினைவிழத்தல் குறைபாட்டால் பாதிக்கப்படும் அப்பாவாக
அதிகாலை நான்கு மணிக்கு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் கண் விழிக்கும் நாயகன் ரங்கசாமியின் (நடிகர் ஆண்டனி) நிழல் போல, அல்ல அல்ல உடல் போலவே தேனி ஈஸ்வரின் ஒளிப்படக் கருவி பயணிக்கிறது. கண்களுக்கு விருந்து என்று வியக்கும் மலைகளின் உடல் வழியே நரம்புகள் போல அமைந்த ஒற்றையடிப் பாதையில் நம்பிக்கையும் அன்பும் கலந்து மொழியும் மனிதர்களை நமக்குக் காட்டியபடியே
மனைவி சம்பாதித்த பணத்தில் செட்டாப் பாக்ஸ் வாங்கச் செல்லும் எழுத்தாளர், போதை மருந்து விற்ற பணத்தை மொத்தவியாபாரியிடம் கொடுக்க முடியாத சிறுவியாபாரி, திருட்டு வழக்கில் சிறை சென்று வந்து கடைசியாகப் பெரிதாக ஒரு சம்பவம் செய்து பெரும் பணம் சம்பாதிக்கத் திட்டமிடும் ஒருவன், இவர்களோடு தாதாயிசத்தை விட்டுவிட வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு மறைந்துவிட்ட அப்பாவின் சொல்லை மதிக்க
ஊரில் பெரிய மணியகாரர் குடும்பம், ஊருக்கே சோறு போட்ட அக்குடும்பத்துக்கு தற்போது, வீட்டின் கதவு, சன்னல்களை விற்றுச் சாப்பிட வேண்டிய நிலை. இதற்கு என்ன காரணம்? இப்படி ஆகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? இதிலிருந்து மீள்வது எப்படி? ஆகியனவற்றுக்கான விடைதான் இப்படம். மகன் உமாபதியை கதாநாயகனாக்க வேண்டும் என்பதற்காக அப்பா தம்பிராமையா எழுதி இயக்கியுள்ள இந்தப்படம், நகைச்சுவை, காதல்,
தமிழகத்தின் பொருளாதாரம் தமிழரல்லாதவர்கள் கைகளில் சிக்கியிருப்பதால் தமிழ் மக்கள் எவ்வளவு பாதிப்புகளுக்காளாகிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லும் படம் காட்டுப்பய சார் இந்தக் காளி. கந்துவட்டி தொடங்கி கார்ப்பரேட் வட்டி வரை அனைத்தையும் சகட்டுமேனிக்கு வெளுத்துக்கட்டுகிறார் இயக்குநர் யுரேகா. ஒரு மார்வாரி ஃபைனான்சியரிடம் பணியாற்றும் ஊழியர்களின் வாகனங்கள் திடீரென் தீப்பற்றி எரிகின்றன.
ஒரு வீடு அல்லது பங்களாவுக்குள் நடக்கும் பேய்க்கதையை ஒரு திரையரங்கத்தில் நடக்கிற மாதிரி காட்டி படத்தின் தலைப்புக்கு நியாயம் செய்திருக்கிறார் இயக்குநர் இசாக். பேய்க்கதை என்றால் என்னென்ன அம்சங்கள் இருக்குமோ அவ்வளவும் இந்தப்படத்திலும் இருக்கிறது. நாயகன் ஆரிக்கு இந்தப்படம் நல்லபெயர் வாங்கித்தரும். எந்த நேரத்திலும் பொய் பேசமாட்டேன் என்று சொல்லுகிற கதாநாயகர்கள் அற்றுப்போய்விட்ட




















