சினிமா செய்திகள்

கீர்த்திஷெட்டிக்காகத் தமிழ்பேசும் பிரபல இயக்குநர் மகள்

அஞ்சான், சண்டக்கோழி 2 ஆகிய படங்களின் படுதோல்விகளுக்குப் பிறகு இப்போது ஒரு தெலுங்குப் படத்தை இயக்கிவருகிறார் லிங்குசாமி.

அப்படத்தைத் தமிழிலும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

அதற்காக, தமிழில் குரல்பதிவு செய்யும் வேலைகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றனவாம்.

இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் கீர்த்திஷெட்டி. இவர் தெலுங்கில் புகழ்பெற்ற நடிகை.

இவருக்காகத் தமிழ் பேச நிறைய பின்னணிக்குரல் கொடுப்பவர்களைத் தேடிப்பார்த்திருக்கிறார்கள். ஆனால், எதுவும் சரியாக அமையவில்லை என்று இயக்குநர் நிராகரித்துவிட்டாராம்.

கடைசியாக, இயக்குநர் லிங்குசாமியின் மகளைப் பேசவைத்துக் குரல்பதிவு செய்துபார்த்திருக்கிறார்கள்.

அந்தக் குரல் பொருத்தமாக இருப்பதாகப் பலரும் சொன்னதால் இப்போது லிங்குசாமியின் மகளே நாயகி கீர்த்திஷெட்டிக்காகப் பேசுகிறார் என்கிறார்கள்.

இயக்குநர் ஷங்கர் தன் மகளைக் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். இப்போது இயக்குநர் லிங்குசாமி தன் மகளைப் பின்னணிக்குரல் கலைஞராக மாற்றியிருக்கிறார்.

Related Posts