2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான படம் பியார்பிரேமாகாதல். ஹரீஷ்கல்யாண் கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தை இயக்கியிருந்தார் இளன். அந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் இயக்குநர் இளனுக்கு அடுத்தபடம் எளிதாக அமையவில்லை. மறுபடியும் ஹரீஷ்கல்யாணையே கதாநாயகனாக வைத்து ஸ்டார் என்கிற
செய்திகள்
செல்வராகன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 7 ஜி ரெயின்போ காலனி.இப்படத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் செட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நாயகன் ரவிகிருஷ்ணாவின் அப்பா ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். இளைஞர்களைக் கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு
நடிகர்திலகம் சிவாஜிகணேசன், தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் சுமார் 1 ஏக்கர் 15 சென்ட் பரப்பளவு நிலத்தில் இரட்டைத் திரையரங்குகள் கட்டினார். ஒரு திரையரங்குக்கு சாந்தி என தன்னுடைய மகளின் பெயரையும், மற்றொரு திரையரங்குக்கு தன்னுடைய மனைவி கமலாவின் பெயரையும் சூட்டினார். 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி திறப்பு விழா நடந்தது. அப்போதைய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர்
கமல்ஹாசன் இப்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி முடியவில்லையாம். இன்னும் ஒரு மாதம் வரை நீடிக்கும் என்றும் ஜூலை மாத இறுதியில் நிறைவடையும் என்றும் சொல்கிறார்கள். இப்படத்துக்கு அடுத்து எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும்,
ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து 2016 ஆம் ஆண்டு வெளியான தில்லுக்கு துட்டு படம் வெற்றி பெற்றது. அதனால் அப்படத்தின் இரண்டாம்பாகமான தில்லுக்கு துட்டு 2, 2019 ஆம் ஆண்டு வெளியானது. இதையும் ராம்பாலாவே இயக்கியிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகம் தொடங்கப்பட்டது. இம்முறை ராம்பாலா இயக்கவில்லை. அவரிடம் பணியாற்றிய பிரேமானந்த் என்பவர் இயக்கியிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் தண்டட்டி.இப்படத்தில், கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர்.இவர்களோடு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14 அன்று வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து,ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள அயலான் திரைப்படம் தீபாவளியையொட்டி நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்போது அவர், ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அப்படத்தின்
நடிகர் தனுஷ் தற்போது, அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இதைத் தொடர்ந்து, தனுஷின் 50 ஆவது படம் தொடங்கவிருக்கிறது.அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் நாயகனாக
இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில்,எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் “பொம்மை”. ஏஞ்சல் ஸ்டுடியோஸ் (ANGEL STUDIOS MH LLP) நிறுவனத்தின் பெயரில் எஸ்.ஜே.சூர்யாவே தயாரித்துள்ளார். இந்தப்படம் 2019 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது.இந்த வாரம் வெளியாகவிருக்கிறது. இவ்வளவு தாமதமாக என்ன காரணம்? இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்த நேரத்தில் கொரோனா சிக்கல்
லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருந்த விக்ரம் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் கமல் இல்லாத காட்சிகள் படமாக்கப்படும் என்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கத்தில் 234 ஆவது படத்தில் கமல் நடிக்கப்போவதாக கடந்தாண்டு அறிவிப்பு




















