தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. இந்தச் சிக்கல் காரணமாக தமிழ்த் திரையுலகும் முடங்கியுள்ளது. படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், நடிகர்கள் அனைவருமே
செய்திகள்
ஐசரிகணேஷ் தயாரிப்பில் உருவான கோமாளி படம் 2019 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று வெளியானது. ஜெயம்ரவி, காஜல் அகர்வால்,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த அப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கியிருந்தார். 2000 ஆம் ஆண்டின் முதல்நாளில் கோமாவில் விழும் பள்ளி மாணவனுக்கு பதினாறு ஆண்டுகள் கழித்து 2016 ஆம் ஆண்டு நினைவு திரும்புகிறது என்பதுதான் அப்படத்தின் அடிப்படைக்கதை. பதினாறு ஆண்டுகளில்
ஊரடங்குக் காலம் என்பதால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் படுகிற பழைய படங்கள் குறித்தான விமர்சனங்கள், விவாதங்கள் பாராட்டுகள் ஆகியன சமூகவலைதளங்களில் பரவுகின்றன. விஜய், அஜீத், சூர்யா ஆகியோரது பழைய படங்கள் ஒளிபரப்பானால் அதைப் பற்றிப் பேசி பெரிய செய்தியாக்கிவிடுகின்றனர் அவர்களுடைய ரசிகர்கள். இந்நிலையில் நேற்று ஜெயாப்ளஸ் தொலைக்காட்சியில், சேரன் இயக்கத்தில் ராஜ்கிரண் சரண்யா
கொரொனா சிக்கலால் தமிழ்த்திரைப்படத்துறையும் முடங்கியுள்ளது. இதனால் திரைப்படத் தொழிலாளர்கள், துணை நடிகர்கள் உள்ளிட்டோர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் நடிகைகள் உதவவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ரஜினிகாந்த் 50 இலட்சம், கமல் 10 இலட்சம் நயன்தாரா 20 இலட்சம் ஆகியன உட்பட ஏராளமானோர் நிதி கொடுத்தனர். இந்தி, தெலுங்கு நடிகர்கள் நிறைய
2015 ஆம் ஆண்டு தொடங்கியது ஹாட் ஸ்டார் செயலி. திரைப்படங்கள், மட்டைப்பந்து விளையாட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எல்லாவற்றையும் தன் சந்தாதாரர்களுக்கு வழங்கிவந்தது. பெரும்பாலான மேல்தட்டு இளைஞர்களின் அபிமான செயலியாகத் திகழ்ந்து வந்தது. இதில் இப்போது பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் (ஏப்ரல் 3, 2020) நடைமுறைக்கு வந்துள்ள அந்த மாற்றத்தின்படி, இனிமேல் ஹாட் ஸ்டார்,
கொரொனா நுண்ணுயிரித் தாக்கம் காரணமாக உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றியமும் விதிவிலக்கல்ல. கொரோனா பாதிப்பைத் தடுக்கும் முயற்சியாக 21 நாட்கள் ஊரடங்கை இந்திய ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 25 தொடங்கிய ஊரடங்கு தொடர்கிறது. கொரொனா பாதிப்பைத் தடுப்பதின் முதல்கட்டம், தனிமைப் படுத்திக் கொள்ளுதல். இதைத் தீவிரமாகக் கடைபிடிக்கச் சொல்கிறார்கள். இந்நிலையில், சிவகார்த்திகேயன்
ஜெயலலிதா வாழ்க்கையை ‘குயின்’ என்ற பெயரில் இணையதளத் தொடராக வெளியானது.இயக்குநர் கவுதம் மேனன், பிரசாத் முருகேசன் ஆகியோர் இயக்கியிருந்தனர். இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்தி நடிகை சிமி அகர்வால் ரம்யாகிருஷ்ணனைப் பேட்டி எடுப்பதுபோல் கதை தொடங்கும். பிளாஷ்பேக்கில் சிறுவயதில் ஜெயலலிதா பள்ளியில் படித்த காட்சிகள், படிப்பின் மீது அவருக்கு இருந்த ஆர்வம்,
மாநகரம், கைதி ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது விஜய் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கடுத்து இவர் ரஜினி நடிக்கும் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன. அந்தச்செய்தி வந்ததோடு சரி அதன்பின் என்னவானது என்பது யாருக்கும் தெரியவில்லை. என்ன நடந்தது?
விஜய் 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டனவாம். விஜய்யும் ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணைகிறார்கள் என்றதுமே அவர்களுடைய முந்தைய வெற்றிப்படமான துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று பரவலாகச் சொல்லப்பட்டது. துப்பாக்கி படத்தில் நாயகியாக நடித்த காஜல் அகர்வால் விஜய் 65
மார்ச் 1,2020 மாலை 4 மணிக்கு சூர்யா 39 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதன்படி,சூர்யா 39 ஆவது படத்தை ஹரி இயக்குகிறார். அந்தப்படத்துக்கு அருவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்துக்கு இசை இமான். முதன்முறையாக அவர் சூர்யா படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. 2020





















