மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையடையவில்லை. படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டன என்றாலும் படத்தின் தொடக்கத்தில் இடம்பெறவிருக்கும் பாடல் ஒன்று எடுக்கவேண்டியிருக்கிறதாம். இதற்காக, பொள்ளாச்சி பகுதிகளில் மூன்று நாட்களும் அதன்பின் மைசூர் பகுதிகளில் இரண்டு
செய்திகள்
கொரோனா ஊரடங்குக்குப் பிறகு ஐம்பது விழுக்காடு இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்கிற விதிமுறையோடு திரையரங்குகள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திறக்கப்பட்டன. ஆனாலும், சுமார் இரண்டு வாரங்கள் கழித்து, குறிப்பிடத்தக்க படங்களாக செப்டம்பர் 9 ஆம் தேதி லாபம் படமும் செபடம்பர் 10 ஆம் தேதி தலைவி படமும் வெளீயாகியிருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து செப்டம்பர் 17 ஆம் தேதி விஜய் ஆண்டனி நடித்துள்ள
ஒரு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிக்க வருகிறார். அவர் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் படத்தை சுராஜ் இயக்குகிறார்.லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அந்தப்படத்துக்கு நாய்சேகர் என்று பெயர் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதேநேரம், நகைச்சுவை நடிகர் சதீஷ் கதையின் நாயகனாகவும் ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனம் கவர்ந்த பவித்ரா லட்சுமி கதாநாயகியாகவும்
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் லாபம் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தைத் திரையரங்கில் பார்த்துவிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் எழுதியிருக்கும் பதிவு…. புயலின் வேகம் கொண்டு, மாற்றங்களை நிகழ்த்தும் கம்யூனிஸ்டுகளின் போராட்ட நுட்பங்கள் புகழ் பெற்றவை. உலக அளவில் பரிசோதிக்கப்பட்டவை. ஆனால் அது காலந்தோறும்
இயக்குநர் ஷங்கர் மற்றும் ராம்சரண் தேஜா முதல்முறையாக இணையும் படத்தின் பூஜை இன்று ஐதரபாத்தில் நடைபெற்றது. இந்தப்படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. செப்டம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது.இந்த நிலையில், ஷங்கர் மற்றும் ராம்சரண் தேஜா இணையும் படத்தின் பூஜை இன்று ஐதரபாத்தில் நடைபெற்றது. இந்த பூஜையில் சிறப்பு
நடிகர் விஜய் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இதற்கடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படம் பற்றிப் பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிப்பில் நேரடித் தெலுங்குப்படமொன்றில் அவர்
இயக்குநர் சிறுத்தைசிவாவின் தம்பி நடிகர் பாலா. இவர்,தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், அஜித்தின் வீரம், கார்த்தியுடன் தம்பி ஆகிய படங்களில் நடித்தவர். மலையாளத் திரையுலகிலும் முக்கிய நடிகராக வலம் வருகிறார்.இவர், தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷ்
ஜெர்மனி நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ்ப் பெண் விட்ஜா, நடிகர் ஆர்யா தன்னிடம் பழகி திருமணம் செய்வதாகக் கூறி, ரூ.70 இலட்சத்தை மோசடி செய்துவிட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இணையம் வழியாக பிரதமர் அலுவலகத்துக்கு புகார் அனுப்பி இருந்தார். அப்புகார் தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தப்புகார் தொடர்பாக பெருநகர சென்னை காவல்துறையினர் விசாரணையைத்
கங்கணாரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படம் முன்னாள் முதல்வர் செயலலிதாவின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு திரையரங்குகளில் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்து இணையத்தில் வெளியிடவும் படக்குழு முடிவு செய்திருந்ததாம். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆர்யா இப்போது சுந்தர்.சி யின் அரண்மணை 3 மற்றும் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்துள்ள எனிமி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. இவற்றிற்கடுத்து இயக்குநர்கள் சாந்தகுமார் மற்றும் சக்திசெளந்தர்ராஜன் ஆகியோர் இயக்கத்தில் நடிப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றில் ஏதாவதொரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்





















