பாகுபலி, சாஹோ ஆகிய படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடித்திருக்கும் படம் ராதே ஷ்யாம். காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் இத்திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி
செய்திகள்
விஷாலின் 33 ஆவது படத்தை இயக்கவிருப்பது ஆதிக்ரவிச்சந்திரன். தயாரிக்கவிருப்பது எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத். பெரும்பொருட்செலவில் பேன் இந்தியா எனப்படும் பன்மொழிப்படமாக இது உருவாகவிருக்கிறது என்று விஷால் சொல்லியிருந்தார். இந்தத் திரைப்படத்திற்கு ‘விஷால் 33’ என்று தற்காலிகமாகப் பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2022 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் பெயரைப்
விஜய் நடித்த வில்லு, அஜீத் நடித்த ஏகன், ஜெயம்ரவி நடித்த பேராண்மை, மிஷ்கினின் நந்தலாலா உட்பட பல படங்களைத் தயாரித்த நிறுவனம் ஐங்கரன் இண்டர்நேசனல் நிறுவனம் சில ஆண்டுகளாகப் படத்தயாரிப்பில் ஈடுபடவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் தயாரிக்கும் புதியபடம் குறித்த அறிவிப்பு நேற்று 2022 ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி வெளியானது. அந்தப்படத்தை, துருவங்கள் பதினாறு, மாஃபியா, தனுஷ்
பாகுபலி1,2 ஆகிய படங்களின் பெரிய வெற்றிக்குப் பின்னர் ராஜமெளலி இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ரத்தம் ரணம் ரெளத்திரம் எனும் ஆர் ஆர் ஆர். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது ஆர்.ஆர்.ஆர். ஏற்கெனவே கொரோனா முதல் இரண்டு அலைகளின் தாக்கத்தால் தொடர்ந்து தள்ளிப்போன இந்தப் படம் சனவரி 7,2022 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தெலுங்கு,
விஷால் இப்போது புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்திருக்கிறார். விஷாலின் 31 ஆவது படமான இதை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனமே தயாரித்திருக்கிறது. இப்படம் சனவரி 26,2022 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார். விஷாலின் 32 ஆவது படமான அதை விஷாலின்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘டான்’ திரைப்படம் அடுத்ததாக வெளிவர இருக்கிறது. இந்த நிலையில்,
சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கும் காமன்மேன் (Common Man) என்கிற படத்தின் குறுமுன்னோட்டம் அண்மையில் வெளியானது.இந்தப் படத்தை செந்தூர்ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்தத் தலைப்பின் உரிமை எங்களிடம் தான் உள்ளது என்று ஏஜிஆர் ரைட் ஃபிலிம்ஸ் (AGR RIGHT FILMS) என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் முறையீடு
கொரோனா தாண்டவத்திக்குப் பிறகு திரைப்படங்களின் வரவு குறைந்திருந்தாலும் ஆல்பம் பாடல்கள் எனப்படும் தனிப்பாடல்கள் வெகுவாக வெளிவந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வைரமுத்துவே தனிப்பாடல்கள் பக்கம் தன் பேனா முனையினை திருப்பி நாட்படுதேறலில் நனைய விட்டிருப்பது காலத்தின் கட்டாய மாற்றத்தை குறிக்கிறது. இந்த 2021 ஆம் ஆண்டு நூற்றுக்கணக்கான தனிப்பாடல்கள் வெளிவந்திருந்தாலும் அதில்
விஜய்சேதுபதி இப்போது காத்து வாக்குல ரெண்டு காதல், கமல்ஹாசனோடு விக்ரம் உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தியில் ஓர் இணைய தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தமிழில் ஓர் இணையத்தொடர் தயாரிக்கத் திட்டமிட்ட பிரபல இணைய நிறுவனம் அதில் நடிக்க வேண்டுமெனக் கேட்டு விஜய்சேதுபதியை அணுகியதாம். கதை மற்றும் இயக்குநர் ஆகிய விசயங்கள் பேசப்பட்ட பின்பு சம்பள
அண்மையில் வெளியான ராக்கி படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படம் சாணிக்காயிதம். இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீர்த்திசுரேஷ் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டன. இப்படத்தில் செல்வராகவனும் கீர்த்திசுரேஷும் அண்ணன் தங்கையாக நடித்திருக்கிறார்களாம். படத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவைச்





















