ரஜினியின் எந்திரன், விஜய்யின் சர்கார் உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்து,தமிழகத்தின் முக்கியமான திரைப்படத் நிறுவனமாகத் திகழ்வது சன் பிக்சர்ஸ். அந்நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தைத் தயாரித்திருக்கிறது. அப்படம் இம்மாதம் 27 ஆம் தேதி வெளியாகும் என்று
சினிமா
ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு, சைரா நரசிம்ம ரெட்டி என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. சுரேந்தர் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ளார். மிகப்பெரிய பொருட் செலவில் தயாராகிவரும் இப்படத்தை சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ளார்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா ஜோடியாக சாயீஷா நடித்துள்ளார். இப்படத்தில், இந்தியப் பிரதமராக மோகன்லாலும், அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையை கே.வி.ஆனந்த், பட்டுக்கோட்டை
சூர்யாவின் காப்பான் படத்தை கோவை பகுதியில் விநியோகம் செய்யக் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம். கோவை பகுதியின் (மினிமம் கியாரண்டி அடிப்படையில்) விநியோக விலையாக 4 கோடி சொல்லப்பட்டிருக்கிறதாம். இந்தத் தொகைக்குப் படத்தை வாங்கி விநியோகிக்க கோவையின் இரண்டு பெரிய விநியோகஸ்தர்களான திருப்பூர் சுப்பிரமணியமும் ராஜமன்னாரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களாம். யார் விநியோக உரிமையைப்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் காப்பான். இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை மதுரை அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. அந்நிறுவனம், தமிழகமெங்கும் விநியோகஸ்தர்களுக்கு அப்படத்தை மினிமம் கியாரண்டி அடிப்படையில் வியாபாரம் செய்துள்ளது. தமிழக
மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன் உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்த டில்லிபாபு தயாரிக்கும் புதியபடம் பேச்சிலர். ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தின் முதல்பார்வையை, கிரிக்கெட் விரர் ஹர்பஜன்சிங் வெளியிட்டுள்ளார். தமிழில் ட்வீட் செய்து தமிழக ரசிகர்களிடையே தமிழ்ப்புலவர் என்று பெயர் பெற்றிருக்கும்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில்,காவல்துறை அதிகாரியாகவும் தாதாவாகவும் இரட்டை வேடத்தில் ரஜினி நடிப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படம் தொடங்கும்போதே, தர்பார் என்ற தலைப்புடன் முதல்பார்வையை வெளியிட்டுவிட்டு படப்பிடிப்பைத் தொடங்கினர். அதன்பின்,படப்பிடிப்பில்
விஜய் இப்போது பிகில் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.அதற்குப் பிறகு மாநகரம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு விஜய்யின் 65 ஆவது படத்தை பேரரசு இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது.ஏற்கனவே விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி படங்களை பேரரசு இயக்கி உள்ளார். 2 படங்களுமே நல்ல லாபம் பார்த்தன. இதுபோல் திருமலை, ஆதி படங்களை இயக்கிய
2004 ஆம் ஆண்டு காந்திகிருஷ்ணா இயக்கத்தில் உருவான செல்லமே படத்தில் நாயகனாக அறிமுகமானார் விஷால். அவருடைய தந்தையே தயாரித்த படம் அது. அதில் பரத் வில்லனாக நடித்திருந்தார். ரீமாசென் நாயகி. ஆரிய உதடுகள் உன்னது என்கிற வைரமுத்துவின் பாடல் பரபரப்பைக் கிளப்பியது. முதல்படத்திலேயே மிகுந்த வரவேற்பைப் பெற்றார் விஷால். ஆனாலும் அப்படம் பொருளாதார ரீதியாக நட்டம். ஆனால் இரண்டாவது
இலங்கை மட்டைப்பந்தாட்ட அணியின் முன்னணி வீரராக இருந்து ஓய்வு பெற்றவர் முத்தையா முரளிதரன். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர். தற்போது இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மஹிந்த ராஜபக்சேவின் சகோதரரான கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முரளிதரன் எடுத்துள்ளார். இந்த நிலையில் கொழும்புவில் நேற்று கோத்தபாய ராஜபக்ச ஏற்படுத்திய வியத்மக என்ற அமைப்பின் சார்பில்





















