ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில்,காவல்துறை அதிகாரியாகவும் தாதாவாகவும் இரட்டை வேடத்தில் ரஜினி நடிப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படம் தொடங்கும்போதே, தர்பார் என்ற தலைப்புடன்
சினிமா
விஜய் இப்போது பிகில் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.அதற்குப் பிறகு மாநகரம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு விஜய்யின் 65 ஆவது படத்தை பேரரசு இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது.ஏற்கனவே விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி படங்களை பேரரசு இயக்கி உள்ளார். 2 படங்களுமே நல்ல லாபம் பார்த்தன. இதுபோல் திருமலை, ஆதி படங்களை இயக்கிய
2004 ஆம் ஆண்டு காந்திகிருஷ்ணா இயக்கத்தில் உருவான செல்லமே படத்தில் நாயகனாக அறிமுகமானார் விஷால். அவருடைய தந்தையே தயாரித்த படம் அது. அதில் பரத் வில்லனாக நடித்திருந்தார். ரீமாசென் நாயகி. ஆரிய உதடுகள் உன்னது என்கிற வைரமுத்துவின் பாடல் பரபரப்பைக் கிளப்பியது. முதல்படத்திலேயே மிகுந்த வரவேற்பைப் பெற்றார் விஷால். ஆனாலும் அப்படம் பொருளாதார ரீதியாக நட்டம். ஆனால் இரண்டாவது
இலங்கை மட்டைப்பந்தாட்ட அணியின் முன்னணி வீரராக இருந்து ஓய்வு பெற்றவர் முத்தையா முரளிதரன். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர். தற்போது இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மஹிந்த ராஜபக்சேவின் சகோதரரான கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முரளிதரன் எடுத்துள்ளார். இந்த நிலையில் கொழும்புவில் நேற்று கோத்தபாய ராஜபக்ச ஏற்படுத்திய வியத்மக என்ற அமைப்பின் சார்பில்
நடிகை மதுமிதா இந்த ஆண்டு பிக் பாஸ் மூன்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆகஸ்ட் மாதம் 3 ஆவது வாரத்தில் வெளியேற்றப்பட்டார். வெளியே வந்ததும் தனக்குத் தர வேண்டிய சம்பள பாக்கியை டிவி நிர்வாகம் தரவில்லை என காவல்துறையில் புகாரளித்தார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் டிவி நிர்வாகமும் தங்கள் தரப்பை விளக்கி
கமல் இப்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் இருக்கிறார். இந்தப்படத்தைத் தொடர்ந்து லைகாவின் தயாரிப்பிலேயே தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் நடந்திருக்கிறது. இப்படம் தொடங்கப் பல மாதங்கள் இருக்கின்றன. இந்நிலையில் திடீரென லைகா நிறுவனத்தின் சார்பில் கமல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, தலைவன் இருக்கிறான் பட ஒப்பந்தத்தை இரத்து செய்து கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாகத் திகழ்வது சன் பிக்சர்ஸ். மிகப்பெரிய படங்களைத் தயாரித்திருக்கும் அந்நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தைத் தயாரித்திருக்கிறது. அப்படம் இம்மாதம் 27 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் நிர்வாகத்தில் மாற்றம் நடந்துள்ளது. முதலில் சன் பிக்சர்ஸ்
சூர்யா, சாயிஷா,ஆர்யா,மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் இம்மாதம் (செப்டம்பர்) இருபதாம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரத்தில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன என்றும் அதனால் தமிழக விநியோகஸ்தர்களை முடிவு செய்வதில் இழுபறி
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா, மேகமாய் வந்து போகிறேன் உள்ளிட்ட பிரபலமான பாடல்களை எழுதிய பாடலாசிரியர் முத்து விஜயன் இன்று உடல்நலக் குறைவால் சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 48. தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராக இருந்தவர் முத்து விஜயன். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் மேகமாய் வந்து
தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் நாளை வெளியாகவிருந்தது. கடைசி நேரத்தில் தள்ளிப் போயிருக்கிறது. தள்ளிப்போனது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் பி.மதன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்….. செப்டம்பர் 6 அன்று வெளியாகவிருந்த எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தை எங்களால் வெளியிட முடியவில்லை. பெரு முயற்சிகள் பல செய்து இத்திரைப்படத்தை வெளியிட





















