மிஷ்கின் இயக்கிய நந்தலாலா, பிசாசு மற்றும் அண்மையில் வெளியான சைக்கோ ஆகிய படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சைக்கோ படத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் இளையராஜாவுடன் முரண்பட்டுக் கொண்டாராம் மிஷ்கின்.இனிமேல் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற
சினிமா
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ஐதராபாத்தில் தொடர்ந்தது. கொரோனா சிக்கல் காரணமாக அந்தப் படப்பிடிப்பு தடைபட்டது. ஊரடங்கு நீண்டு கொண்டிருக்கும் நிலையில் அப்படத்தைத் தொடர்ந்து எடுக்கும் முடிவை படக்குழு கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது. திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுத்தாலும் இந்தப்படத்தில் சுமார் இரண்டாயிரம்
மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த எஸ்.ஜி.சார்லஸ் முதன்முறை இயக்கியுள்ள படம் லாக்கப். இந்தப் படத்தில் வைபவ், வாணி போஜன், ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிதின் சத்யா தயாரித்துள்ள இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இதில் முதன் முறையாக வெங்கட் பிரபு வில்லனாக நடித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அஜீத் இரட்டை வேடங்களில் நடித்து 1999 ஆம் ஆண்டு வெளியான படம் வாலி. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அஜீத்தின் சந்தை மதிப்பு உயர அந்தப்படம் காரணமாக இருந்தது. அதேபோல அஜீத் மூன்று வேடங்களில் நடித்து 2006 ஆம் ஆண்டு வெளியான படம் வரலாறு.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜீத், அசின் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இப்போது இவ்விரு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி உட்பட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் மாஸ்டர். இப்படம் ஏப்ரல் 9,2020 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. கொரோனா சிக்கல் காரணமாக இன்னும் படம் வெளியாகவில்லை. இந்நிலையில், மாஸ்டர் படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளியிடவிருப்பதாக அவ்வப்போது செய்திகள் வரும். ஆனால் அதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான செய்தி
கொரோனா ஊரடங்குக்குப் பிறகு சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் அதற்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை என்று சொல்லப்பட்டது. இதனால் தமிழ்த்திரையுலகிலும் இங்கும் அப்படி நடக்குமோ? என்கிற கவலை வந்தது. ஆனால், அங்கு வரவேற்பில்லாமல் போனதற்குக் காரணம் புதிய படங்கள் வெளியாகததுதான் என்று சொல்லப்படுகிறது.அதேநேரம் இப்போது நடக்கும் நிகழ்வு
‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜோஷ்வா: இமை போல் காக்க’. வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் வருண், ராஹி உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். இதன் பெரும்பாலான பகுதிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தவேண்டியிருக்கிறது.
அஜீத்தை வைத்து நேர்கொண்டபார்வை படத்தைத் தயாரித்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், இப்போது அவரை வைத்து வலிமை என்றொரு படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கால் அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது என்கிறார்கள். அதேநேரம், அஜீத்துக்கும் போனிகபூருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படம் தடைபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தநேரத்தில்
பின்னணிப் பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா நடிப்பில் சில படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படங்களில் சுந்தர்.சியின் அரண்மனை 3 படம் வேகமாக வளர்ந்திருக்கிறது. மற்ற படங்கள் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஒரு அரசியல் வாரிசு நடிகர் தொடர்பாக ஆண்ட்ரியா வெளீயிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளால் அவருக்குப் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
கென்னடி கிளப் படத்துக்குப் பிறகு, சுசீந்திரன் இயக்கும் படத்தில் ஜெய் நாயகனாக நடிக்கிறார். அவருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்று செய்திகள் வந்தன. இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் திடங்கும் என்றும் செய்திகள் வந்தன. ஆனால், யாரும் நம்பமுடியாவண்ணம் கொரோனா ஊரடங்குக் காலத்திலேயே மொத்தப்





















