சந்தானத்தின் மன்னவன் வந்தானடி – புதிய தகவல்

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் மன்னவன் வந்தானடி என்கிற படம் 2016 டிசம்பர் முதல் வாரத்தில்
தொடங்கப்பட்டது. முதல்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.அப்படத்தில் நாயகியாக அதிதி பொஹன்கர் நடித்தார். யுவன் இசையமைக்கிறார்.
பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. படத்தின் முதல்பார்வையும் வெளியிடப்பட்டது.
அதன்பின், பொருளாதாரச் சிக்கல் காரணமாக அந்தப்படம் நடக்காமல் இருந்தது. இப்போது அந்தப் படத்துக்கு விடிவுகாலம் பிறந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்படத்தின் சிக்கல்களைப் பற்றி கேட்டறிந்து கொண்ட தயாரிப்பாளர் வருண் மணியன், அவற்றைச் சரி செய்து படத்தை முடித்து வெளியிட முன்வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்போது சந்தானம் வரிசையாகச் சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். செல்வராகவன் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
அவற்றின் வேலைகள் பாதிக்கப்படாமல் இந்தப்படத்தை எடுத்து முடிக்கத் திட்டமிட்டு அதற்கான வேலைகளைத் தொடங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
எனவே, விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்கிறார்கள்.