நடிகர் விஜய் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இதற்கடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படம் பற்றிப் பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. தெலுங்கு இயக்குநர் வம்சி
சினிமா
இயக்குநர் சிறுத்தைசிவாவின் தம்பி நடிகர் பாலா. இவர்,தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், அஜித்தின் வீரம், கார்த்தியுடன் தம்பி ஆகிய படங்களில் நடித்தவர். மலையாளத் திரையுலகிலும் முக்கிய நடிகராக வலம் வருகிறார்.இவர், தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷ்
ஜெர்மனி நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ்ப் பெண் விட்ஜா, நடிகர் ஆர்யா தன்னிடம் பழகி திருமணம் செய்வதாகக் கூறி, ரூ.70 இலட்சத்தை மோசடி செய்துவிட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இணையம் வழியாக பிரதமர் அலுவலகத்துக்கு புகார் அனுப்பி இருந்தார். அப்புகார் தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தப்புகார் தொடர்பாக பெருநகர சென்னை காவல்துறையினர் விசாரணையைத்
கங்கணாரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படம் முன்னாள் முதல்வர் செயலலிதாவின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு திரையரங்குகளில் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்து இணையத்தில் வெளியிடவும் படக்குழு முடிவு செய்திருந்ததாம். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆர்யா இப்போது சுந்தர்.சி யின் அரண்மணை 3 மற்றும் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்துள்ள எனிமி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. இவற்றிற்கடுத்து இயக்குநர்கள் சாந்தகுமார் மற்றும் சக்திசெளந்தர்ராஜன் ஆகியோர் இயக்கத்தில் நடிப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றில் ஏதாவதொரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்
விஷால் இப்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் எனிமி மற்றும் அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் வீரமே வாகை சூடும் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. விஷாலின் 31 ஆவது படம் என்று சொல்லப்படும் வீரமே வாகை சூடும் படத்தின் பெயரும் முதல்பார்வையும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி விஷால்
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் செயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு திரைப்படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், செயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தில் கலைஞர் வேடத்தில் நாசரும் ஆர்.எம்.வீரப்பன் வேடத்தில் சமுத்திரகனியும் நடித்திருக்கிறார்கள்.
ஜெயம்ரவி இப்போது பொன்னியின்செல்வன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தில் அவருடைய பகுதிகள் நிறைவடைந்துவிட்டதென அண்மையில் அறிவித்திருந்தார். பொன்னியின்செல்வன் படத்தைத் தொடர்ந்து அகமது இயக்கத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படத்தின் படப்பிடிப்புக்காக வெளீநாடு செல்வதில் நிறைய இடையூறுகள்
இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி பட சிக்கல் காரணமாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த தடையினால் 4 வருடங்களாக படங்களில் அவர் நடிக்கவில்லை. தற்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட்டு தடை விலக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து வடிவேல் மீண்டும் படங்களில் நடிக்கத் தயாராகி உள்ளார். இதுகுறித்து வடிவேலு அளித்துள்ள பேட்டியில், எனக்கு
ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. இப்படம் தொடங்கியதிலிருந்தே பல சிக்கல்கள். எல்லாவற்றையும் தாண்டி படப்பிடிப்பு தொடர்ந்துகொண்டிருந்தபோது ஒரு பெரும் விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு தடைபட்டது. அதன்பின் கொரோனா சிக்கல் தொடங்கியதால் இந்தியன் 2 படமும் அதில் மாட்டிக்கொண்டது. அதனால் படப்பிடிப்புக்கு மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனத்துக்கும்





















