உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா மற்றும் மிஸ்டர்.பிரக்னெண்ட் படப்புகழ் ரூபா கொடவாயூர் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ள படம் எமகாதகி. இப்படத்தில் அமரன் புகழ் நடிகை கீதா கைலாசம் மற்றும் பிளாக்ஷீப் புகழ் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்,ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, அமீர் உட்பட பலர் நடித்திருந்த படம் வடசென்னை.2018 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.முதல்பாகம் வெளியான போதே அப்படத்தின் இரண்டாம்பாகமும் உருவாகும் என்று சொல்லியிருந்தனர். அதனால், தனுஷ் வெற்றிமாறன் ஆகியோர் எப்போது செய்தியாளர்களைச் சந்தித்தாலும் வடசென்னை 2 எப்போது?
வாரந்தோறும் நிறையப் படங்கள் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன. மார்ச் 7 அன்று ஏழு படங்கள் வெளியாகின.அடுத்து மார்ச் 14 அன்று பத்து படங்கள் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பத்துப் படங்களில் ரவிமோகனின் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சும் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் ஆகிய இரண்டு படங்கள் மறுவெளியீடு செய்ய்ப்படுகின்றன. இவை தவிர, ஸ்வீட் ஹார்ட்,வருணன்,
இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வருணன் – காட் ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தில் டத்தோ ராதாரவி, சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா,சங்கர் நாக் விஜயன், ஹரிப்பிரியா, மகேஸ்வரி, ஜீவா ரவி, அர்ஜுனா கீர்த்தி வாசன், ஹைடு கார்த்தி, பிரியதர்ஷன், கௌஷிக், துங்கன் மாரி, கிரண் மயி, பேபி ஜாயிஸ்,ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீ
நடிகர் சூர்யா இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.அந்தப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் பல நாட்கள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. இப்படத்துக்கு அடுத்து வெற்றிமாறன் இயக்கும்
பெண் பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில் , பெண்கள் பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ராபர். மார்ச் 14 அன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் 07.03.2025 அன்று நடைபெற்றது. விழாவில் கலை இயக்குனரால் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த பொக்கிஷ பெட்டியில் சங்கிலி மற்றும் கிரெடிட் கார்டு மூலம் கோர்த்து செய்து இருந்த ராபர் இசைத்தகட்டை
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’. மார்ச் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் எட்டு அன்று நடைபெற்றது. நிகழ்வில்,தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசியதாவது…..,
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதியபடம் பைசன் காளமாடன். இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, ஒளிப்பதிவாளராக எழில் அரசு ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய
படவா என்கிற பெயரைப் பார்த்ததுமே பொறுப்பற்ற இளைஞர்களைப் பற்றிய படமென்று எண்ணத் தோன்றும்.ஆனால், இந்தப்பெயரை வைத்துக் கொண்டு இயற்கையைப் பாதுகாப்பது விவசாயத்தை மேம்படுத்துவது போன்ற உயரிய விசயங்களைப் பேசியிருக்கிறார்கள். வேலை வெட்டியின்றி சின்னச் சின்னத் திருட்டுகள் செய்து கொண்டு சுற்றிருக்கும் நாயகன் விமல்,ஊர்த்தலைவராகி அரசாங்கத்தின் ஒட்டுமொத்தப் பாராட்டைப் பெறுமளவுக்கு
நாட்டுக்குள் வீட்டுக்குள் காட்டுக்குள் நடக்கும் பேய்க்கதைகளைப் பார்த்திருப்போம்.இது கடலுக்குள் நடக்கும் பேய்க்கதை. தூத்துக்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தோர் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடிவதில்லை.காரணம் அங்கொரு ஆன்மா மீன்பிடிக்க வருகிறவர்களைக் கொன்றுவிடுகிறது.இதனால் பல்லாண்டுகளாக அக்கிராம இளைஞர்கள் சரியான வேலை வாய்ப்பின்றித் தவிக்கிறார்கள்.அதனால் அவர்கள் குடும்பமும்























