கிராமங்களில் சொல்லப்படும் பழங்கதைகள் உண்மையானவையா? என்பதைக் கண்டறிந்து ஆவணப்படுத்தும் படங்களை எடுக்கும் குழுவினர் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் சொல்லப்படும் ஏழு கன்னிகள் கதையை ஆவணமாக்க காட்டுக்குள் செல்கிறார்கள்.அங்கு என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்வதுதான் மர்மர் படம்.
நான்கு கதைகள்,நான்குமே அம்மா பாசத்தை மையமாகக் கொண்டவை.அதை வைத்துக் கொண்டு பல்வேறு நிறங்கொண்ட மனிதர்களைக் காட்டியிருக்கும் படம் நிறம் மாறும் உலகில். ரியோராஜ்,நட்டி,சாண்டி ஆகியோர் மகன்களாகக் காட்டுகிற பாசங்களும் பாரதிராஜா வடிவுக்கரசி,கனிகா,ஆதிரா,துளசி ஆகியோர் பெற்றோரின் சோகங்களும் பின்னிப்பிணைந்திருப்பதுதான் இந்தப்படம். மகன்களின் அம்மா மீதான பாசத்தை வெவ்வேறு விதமாக
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்கிற காலம் மலையேறிவிட்டது என்பதை உரத்துச் சொல்லியிருக்கும் படம் ஜெண்டில்வுமன். கணவன் ஹரிகிருஷ்ணன் மீது அன்பாக இருக்கும் மனைவி லிஜோமோல்ஜோஸ்.ஒரு கட்டத்தில் கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பதைத் தெரிந்தவுடன் கலங்கிப் போகாமல் அனைவரும் அதிரும்படி அதிரடியாகக் கணவரைக் கொலை செய்துவிடுகிறார்.அதன்பின் என்னவெல்லாம்
அறிவியலின் அசுர வளர்ச்சி நம்பவியலாத நாகரிக வளர்ச்சி ஆகியன நடந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலும் சாதிய பாகுபாடு மற்றும் ஆணவக் கொலைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கும் அவலமும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.இச்சிக்கலை திரைமொழியில் பேசியிருக்கும் படம் எமகாதகி. படத்தின் நாயகி ரூபா கொடுவாயுர் தற்கொலை செய்துகொள்கிறார்.இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு சடலத்தைத் தூக்க முடியாத அளவு
நடிகர் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு சண்டைப்பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றுகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில்
வாழை படத்தில் ஒரு காட்சி. வாழை மரத் தோப்புக்குள் ஒரு மரத்திலிருந்து ஒரு பழத்தைப் பிய்த்துச் சாப்பிடுவான் ஒரு சிறுவன்.அதைப் பார்த்ததும் தோட்டத்து உரிமையாளர், அச்சிறுவனை அடித்துவிட்டு யார் வீட்டுத் தோட்டத்துல வந்து யார்? சாப்பிடுறது? என்று திட்டுவார். இந்தக் காட்சி இந்தப் பொருளிலேயே புரிந்துகொள்ளப்பட்டதா என்றால்? இல்லை. தோட்டக்காரரின் உருவத்தையும் மீசையையும் வைத்து அவரை ஒரு
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மதராஸி. இதுவரை திரையில் தோன்றியிராத மிரட்டலான அதிரடி ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தென்னிந்தியா இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்ட, கன்னட நடிகை ருக்மணி வசந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். துப்பாக்கி படத்திற்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் ஏ ஆர் முருகதாசுடன்
ஈரம் படத்தில் தண்ணீரில் பேய் இருக்கிறதெனச் சொல்லி வெற்றி பெற்ற இயக்குநர் அறிவழகன் ஒலியில் பேய் என்று சொல்லி பயமுறுத்த முனைந்திருக்கும் படம் சப்தம். நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் மூன்று மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதனால், அந்தக் கல்லூரியில் அமானுஷ்ய சக்தி இருப்பதாகத் தகவல் பரவுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சம்
உலகம் உயிர்களுக்கானது மனிதர்க்கு மட்டுமன்று என்றொரு புகழ்பெற்ற சொல்லாடல் உண்டு.அதன் திரைவடிவமாக வந்திருக்கும் படம் கூரன்.கூரன் என்றால் தமிழ் அகராதியில் நாய் என்று அர்த்தமாம் மகிழுந்து ஒன்றினால் தனது குழந்தை (நம் பார்வையில் நாய்க்குட்டி) கொல்லப்பட்டுவிட அந்தக் கொலைக்கு நீதி கேட்டு ஒரு நாய் போராடுவதுதான் இந்தப்படம்.அது எப்படி முடியும்? என்கிற கேள்விக்கான விடைதான் திரைக்கதை.
இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்திருக்கிறார்.இதனால், பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு இல்லாத உரிமை எப்படி இசையமைப்பாளருக்கு மட்டும் இருக்கும்? என்கிற எதிர்ப்புக் குரல்களும் எழுந்து வருகின்றன. இந்தச் சிக்கலுக்கு சரியான தீர்வு இதுவரை எட்டப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், திரைப்பட இசை மற்றும் பாடல்கள், தனிப்























