செக்கச் சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார் மணிரத்னம். இந்தப்படமும் பல நடிகர்கள் நடிக்கும் படமாகவே உருவாகவிருக்கிறதாம். பல நடிகர்கள் என்றதுமே இது பொன்னியின்செல்வன் கதை என்கிற செய்திகள் வருகின்றன. இந்தப்படத்தில் நடிக்க விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோரிடம்
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. இப்படத்தின் தமிழக உரிமையை உதயநிநியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் பெற்றுள்ளது. இதற்கு முன் இந்நிறுவனம் ’கபாலி’, ’தெறி’, ‘பிச்சைக்காரன்’,
விஷால் இப்போது வெங்கட்மோகன் எனும் புது இயக்குநர் இயக்கத்தில் அயோக்யா என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படம் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஷால் மீண்டும் மிஷ்கினோடு இணையவிருக்கிறார். கடந்த ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார் விஷால். மிஷ்கின் இப்போது உதயநிதியை வைத்து சைக்கோ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இயக்குநர் வசந்தபாலனின் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். 2006 ஆம் ஆண்டு இறுதியில் அந்தப்படம் வெளியானது. அதன்பின் நிறையப்படங்களில் பணியாற்றும் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் மாறினார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயில்’ படத்தில் ஜி.வி தான் கதாநாயகன். இசையமைப்பாளரும் அவரே. இப்படத்தில் ஒரு பாடலுக்காக நடிகை
விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு சென்னையில் டிசம்பர் 14,2018 அன்று பூஜை போடப்பட்டது. சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் என்று கூறப்படுகிறது. இந்தப்படத்தின் பூஜையில் தந்தி தொலைக்காட்சியிலிருந்து வெளியேறிய ரங்கராஜ்
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன்,இளவரசு,முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் டிசம்பர் 14 மாலை நடைபெற்றது. கனா, இது நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம். எந்த ஒரு
ஒரு கதாநாயகன் அவருக்கு நான்கு நண்பர்கள். ஐவரும் இணைந்து பாதி சட்டம் மீதி விரோதமாக ஒரு தொழில் செய்கிறார்கள். அந்தத் தொழிலால் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அதன் விளைவாக ஒவ்வொருவராக மர்ம மரணம் அடைகிறார்கள். எப்படி? எதற்காக? என்பதைச் சொல்வதுதான் படம். ஐவரில் ஒருவராக இருக்கும் பிரசாந்துக்கு இது வித்தியாசமான வேடம். எந்த உணர்ச்சியையும் காட்டாமல் எல்லாச் சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்.
ரஜினியின் 2.ஓ படத்துக்குப் பிறகு ஷங்கர் இயக்கவிருக்கும் படம் இந்தியன் 2. கமல் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அக்ஷய்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் 14 அன்று (அதாவது இன்று) தொடங்கத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை. எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருந்தது,
படத்தின் பெயர் துப்பாக்கிமுனை, படத்தில் நாயகன் விகரம்பிரபுவுக்குக், குற்றவாளிகளை விசாரணையின்றிச் சுட்டுக்கொன்று தீர்க்கும் காவல் அதிகாரி வேடம் என்றதும் படம் முழுக்க ரத்தம் தெறிக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு வருவது இயற்கை. அந்த எதிர்பார்ப்புடன் சென்றால், நாம் நினைத்ததைக் கொஞ்சம் கொடுத்துவிட்டு நினைக்காததை நிறையக் கொடுத்திருக்கிறார்கள். மும்பையில் காவலதிகாரியாக இருக்கும்
பாலாஜிதரணிதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படம் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கடந்த ஓராண்டுக்கும் மேல் இப்படம் தயாரிப்பில் இருக்கிறது.கடந்த சில வாரங்களாகவே இப்பட வெளியீடு குறித்த அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப்போது இப்படத்துக்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. அதில்…. நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளிவர உள்ள























