மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, விஜய்சேதுபதி உட்பட பலர் நடிக்கும் படம் பிசாசு 2. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடந்துவருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் ஒரு பாடல் காணொலி நேற்று வெளியானது. கார்த்திக் ராஜா இசையில், நெஞ்சை கேளு என்று தொடங்கும் அந்தப்பாடலை கபிலன் எழுதியுள்ளார்.
கிஷோர், சூரி, விஜய்சேதுபதி மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார்.அவர் இப்படத்திற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார். இப்படத்தின் வேலைகள் தொடங்கி இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பிசாசு 2’. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது, ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தில் விஜய்சேதுபதி சில காட்சிகளில் வருகிறார்.இந்தப்படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம், பல திரைப்படங்களின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. இவ்வாண்டு தொடக்கத்திலேயே விஷ்ணுவிஷால் நடித்த எஃப ஐ ஆர் படம் மூலம் திரைப்பட விநியோகத்தைத் தொடங்கிய ரெட்ஜெயண்ட் நிறுவனம், அதன்பின் விஜய் நடித்த பீஸ்ட், விஜய்சேதுபதியின் காத்துவாக்குலரெண்டுகாதல், சிவகார்த்திகேயனின் டான், உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி
தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கிராமத்தில் (இளையராஜா பிறந்த ஊர்) முதன்முதலாக ஆட்டோ வாங்கி ஓட்டுகிறார் விஜய்சேதுபதி. நல்லொழுக்கம் மிகுந்த அவர் தனியர்.அவருக்கு ஓர் உற்ற நண்பர். படத்தில் இஸ்லாமியாராக வரும் குரு.சோமசுந்தரம். தனியராக இருந்தாலும் எவ்வித கெட்டபழக்கங்களும் இல்லாமல் சொந்தமாக ஒரு வீடு கட்டி வைத்துக் கொண்டு திருமணத்துக்குப் பெண் தேடுகிறார். அவருடைய நற்பண்புகள் மூலம்
விஜய்சேதுபதி நடிப்பில் தமிழில் இரண்டு படங்கள் தயாராக இருக்கின்றன. அந்தப்படங்களையும் அவர் முடித்துக்கொடுத்துப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவற்றிற்கடுத்து அவருக்குத் தமிழில் படங்கள் இல்லை. இப்போது, இணையத்தொடர் மற்றும் படங்கள் என இந்தி மொழியில் ஓய்வின்றி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தியில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் அதனால் நல்ல வருமானம் இருந்தாலும் தமிழில் படமே இல்லை
கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் விக்ரம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்திருக்கும் இந்தப் பெருவெற்றியை மகிழ்வுடன் கொண்டாடிவருகிறார் கமல். படத்தில் பணியாற்றிய துணை இயக்குநர்களுக்கு விலையுயர்ந்த துள்ளுந்துகள், இயக்குநர் லோஜேஷ்கனகராஜுக்கு விலையுயர்ந்த மகிழுந்து, படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்த
இரண்டு இலட்சம் கோடி மதிப்பிலான போதைப்பொருளை ஒரு காவல்துறை அதிகாரி அதிரடியாகப் பறிமுதல் செய்து தனது துறைக்கே தெரியாமல் மறைத்து வைக்கிறார். அதனால் அவரை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொலை செய்கிறார்கள். அக்கொலையில் சம்பந்தப்பட்ட வில்லன்கள் மர்ம முகமூடி மனிதர்களால் கொலை செய்யப்படுகிறார்கள். அக்கொலைகளைச் செய்வது யார்? என்று கண்டுபிடிப்பதுதான் படம். கமலைச் சுற்றியே திரைக்கதை
லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில், கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில்,நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் விக்ரம். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் ஜூன் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படவெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. வெளிநாடுகளுக்கு மூன்று நாட்கள் முன்னதாக படம்
லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உட்பட பலர் நடித்துள்ள படம் விக்ரம். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தின் மூலம் சுமார் நான்காண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளுக்கு வருகிறார் கமல். இப்போது பெருமளவில் புழக்கத்தில் இருக்கும் பான் இந்தியா படமாக இதை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் கமல். அதனால், தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா,கேரளா, கர்நாடகா




















