எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவான சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க ஆகிய படங்களில் நகைச்சுவை நடிகராக கதாநாயகர்களுக்கு இணையாக நடித்திருந்தார் சந்தானம். கதாநாயகனுக்குச் சமமாக சந்தானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த
நடிகர் சந்தானம், கொரோனா ஊரடங்குக்குப் பின் படப்பிடிப்புகள் தொடங்கியபோது, ஏஒன் படத்தின் இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 12 ஆம் தேதி சென்னையில் நிறைவடைந்தது. உடனே அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக கும்பகோணம் புறப்பட்டுவிட்டார் சந்தானம். கும்பகோணத்தில் டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கிய புதிய படத்தின்
விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். அதைத் தொடர்ந்து அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.பல நாட்கள் பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு அனிமேஷன் படமொன்றை இயக்குவது என்று முடிவெடுத்துவிட்டாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பாரதிராஜா – சூரி இருவரும் இணைந்து நடிக்கின்றனர். ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இதில் நாயகனாக சூரி நடிக்கவுள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜாவும், பவானி ஸ்ரீயும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்துக்காக வெற்றிமாறன் தேர்ந்தெடுத்த கதை தவறானது
இயக்குநர் வெற்றிமாறன் இப்போது சூர்யா கதாநாயகனாக நடிக்கும் வாடிவாசல் மற்றும் சூரி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படம் ஆகியனவற்றை இயக்குவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் இன்னும் தொடங்கவில்லை. எப்போது தொடங்கும் என்கிற தகவலும் இல்லை. இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் புதியபடமொன்று உருவாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்புதிய படத்தில் கதாநாயகனாக
விஜயகாந்த்தின் இரண்டாவது மகன் சண்முகபாண்டியன். இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் படம் மூலம் தமிழ்த்திரையுலகில் கதாநாயகனாகக் காலடி எடுத்துவைத்தார். அதன்பின் அவர் நடித்த மதுரவீரன் படம் 2018 ஆம் ஆண்டு வெளியானது. இவற்றிற்கு அடுத்து தமிழன் என்று சொல் என்கிற படத்தில் நடிக்கப்போவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அப்படம் நடக்கவில்லை. மித்ரன் என்றொரு படம் தொடங்கப்பட்டது. அதுவும் ஒரு
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படம் 2019 அக்டோபர் 25 அன்று வெளியானது. அப்படம் வெளியாகி ஓராண்டு கடந்துவிட்டது. அப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் படம் தயாராகிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் அப்படத்தின் இயக்குநர் அட்லியின் அடுத்தபடம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேசமயம், அட்லி அடுத்து ஷாருக்கான் நடிக்கும் இந்திப்படத்தை இயக்கப்போகிறார்
உதயநிதி ஸ்டாலின் இப்போது கண்ணை நம்பாதே உட்பட சில படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். அவற்றோடு நவம்பர் மாத தொடக்கத்தில் மகிழ்திருமேனி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் ஏற்கெனவே பாலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வந்தன. ஆனால் அதன்பின் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும்
சசிகுமார் இப்போது எம்ஜிஆர் மகன், முந்தானை முடிச்சு உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றோடு புதிய படமொன்றில் நடிக்க தற்போது ஒப்பந்தம் போட்டுள்ளாராம். திருமணம் எனும் நிக்கா படத்தை இயக்கிய அனீஸ் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை கிஷோர் என்பவர் தயாரிக்கிறார். ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு தள்ளிப்போனது. ஊரடங்குக்குப் பின்
கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் இணைய நிறுவனங்கள் திரைப்படங்களை நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கின. தமிழில் பொன்மகள்வந்தாள், டேனி, க.பெ.ரணசிங்கம் மற்றும் சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களை நேரடியாக இணையத்தில் வெளியிடுகிறார்கள். இணையத்தில் நேரடியாக வெளியிடுவதிலும் அமேசான்,நெட்ஃபிளிக்ஸ்,ஜீ 5,ஹாட்ஸ்டார் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய நிறுவனங்களிடையே போட்டி நிலவுகிறது.






















