2019-ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற கார்த்தியின் கைதி படத்தின் கதை தன்னுடையது என கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் கைதி 2 படம் எடுக்கத் தடை விதித்துள்ளது. 2000-ஆம் ஆண்டு சென்னை புழல் சிறைச்சாலையில் தனக்கு நடந்த
நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் நயன்தாரா.இவற்றில், நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது.காத்துவாக்குலரெண்டுகாதல் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ளவேண்டியிருக்கிறதாம். இவற்றிற்கடுத்து அவர் எந்தப்படத்தில் நடிக்கிறார் என்பது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.
பிறக்கும்போதே அம்மாவை இழக்கும் கார்த்தி, அம்மா போல் தன்னை வளர்த்தவர்களைப் பாதுகாக்கப் போராடுவதுதான் சுல்தான். வழக்கமான அட்டகாசச் சிரிப்புடன் அறிமுகமாகும் கார்த்தி, படம் முழுக்க இறங்கி விளையாடியிருக்கிறார். இடைவேளை நேரத்தில் வருகிற சண்டைக்காட்சியில் விஸ்வரூபம் எடுத்து மிரள வைக்கும் அவர் நாயகி ராஷ்மிகாவைப் பார்த்து மிரளும்போது ரசிக்க வைக்கிறார்.ஒரு பெரும்பழியைச் சுமந்து
கார்த்தி,ராஷ்மிகா,நெப்போலியன், லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான்.பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப்படத்தை டிரீம்வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி படம் வெளீயாகவிருக்கும் நிலையில் இன்று (மார்ச் 24) அப்படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.கார்த்தி, ராஷ்மிகா, பாடலாசிரியர் தனிக்கொடி, விவேகா, நடிகர்கள் பிரின்ஸ், சென்றாயன், கேஜிஎஃப்
மார்ச் 26 ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் வெளியாவதாக இருந்தது. அப்படக்குழு வெளீயிட்ட மார்ச் 9 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில்…. மார்ச் 26 ஆம் தேதி படத்தை வெளியிட உற்சாகத்தோடு இருந்தோம். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்கிறோம். படம் தொடர்புடைய அத்தனை தரப்பின் நலனையும், குறிப்பாக ரசிகர்களையும் மனதில் வைத்து இம்முடிவை
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக விவேக் – மெர்வின், படத்தொகுப்பாளராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி
2018 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியான கன்னடப் படம் ‘கே.ஜி.எஃப்’.யஷ் நடித்த இந்தப்படத்தை `உக்ரம்’ பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக், அச்யுத் குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இதனை ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்துர் தயாரித்துள்ளார். இப்படத்தை கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும்
விஷ்ணுவிஷால் நடிப்பில் 2015 இல் வெளியான படம் இன்று நேற்று நாளை. அதன் இயக்குநர் ரவிக்குமார். அப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் ரவிக்குமார். அப்படம் பல்வேறு காரணங்களால் தாமதமானது. இவ்வாண்டு இறுதியில் அப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டு அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன். கோரோனா ஊரடங்கால் எல்லாம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கைதி படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற ‘கைதி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பகிர்ந்த கருத்துகள்… புதிய யோசனை, புதுக்கதை கேட்டுப் பாருங்கள் என்று லோகேஷ் கதை கூறியதும், இது சிறிய படமல்ல ‘டை ஹார்ட்’, ‘ஸ்பீட்’ போல
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘பிகில்’. தீபாவளியை ஒட்டி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் முன்னோட்டம் அக்டோபர் 12 மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இந்த முன்னோட்டத்துக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அண்மையில் இப்படம் தணிக்கை செய்யப்பட்டது. தணிக்கையில் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனால் இப்படத்தின் வெளியீட்டுத்




















