சினிமா செய்திகள்

நடிகர் நடிகை காதல்திருமணம் – நிச்சயதார்த்தம் நடந்தது

2007 ஆம் ஆண்டு வெளியான மிருகம் திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் ஆதி. அதன்பின் நிறையப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் தமிழில் முன்னணி நிலைக்கு அவரால் உயர முடியவில்லை.

அதேபோல் 2015 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் கதாநாயகியாகக் கால் பதித்தவர் நிக்கிகல்ராணி. அவரும் அதன் பின் நிறையப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆதி, நிக்கிகல்ராணி ஆகிய இருவரும் யாகாவாராயினும் நா காக்க மற்றும் மரகதநாணயம் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

ஆனால் இருவருமே அதை உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், இன்று அவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மார்ச் 24 அன்று இந்த நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நட்சத்திரங்கள் தம்பதியாகும் நிகழ்வு நடந்துள்ளது.

Related Posts