சினிமா செய்திகள்

பாலா படத்தில் நடிக்கிறார் பிருந்தாசாரதி

பாலா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் கீர்த்திஷெட்டி நாயகியாக நடிக்கவிருக்கிறார்.

இந்தப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இயக்குநர் பிருந்தாசாரதி நடிக்கவிருக்கிறாராம்.

இயக்குநர் லிங்குசாமியின் ஆனந்தம், பையா, வேட்டை உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ள பிருந்தாசாரதி, தித்திக்குதே என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

படத்தில் இடம்பெறவிருக்கும் முக்கிய வேடமொன்றில் நடிக்கப் பலரைத் தேடிய பின்பு இயக்குநர் பிருந்தாசாரதியைத் தேர்ந்தெடுத்தாராம் பாலா.

இப்போது லிங்குசாமி இயக்கும் தி வாரியர் படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கும் பிருந்தாசாரதி, பாலா படத்தில் பெரிய வேடத்தில் நடிக்கிறார் என்கிறார்கள்.

இந்தப்படத்தின் நாயகி கீர்த்திஷெட்டியும் தி வாரியர் படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts