செய்திக் குறிப்புகள்

பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் அஞ்சலிமேனன் – விவரம்

இயக்குநர் அஞ்சலிமேனனின் படைப்புகளான ‘பெங்களூர் டேஸ்’, ‘மஞ்சாடிக்குரு’, ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘கூடே’ ஆகிய திரைப்படங்களும், சமீபத்தில் வெளியான ‘ஒண்டர் வுமன்’ ஆகிய திரைப்படமும் அனைத்துத் தரப்பிலும் பெரும் வரவேற்புப் பெற்றது.

தனது படைப்புகளில் முத்திரை பதிக்கும் அஞ்சலிமேனன் இம்முறை, கன்னடத் திரையுலகில் புகழ்பெற்ற கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இனைகிறார்,

திரைப்படத் தயாரிப்பு மற்றும் திரைப்படவிநியோக நிறுவனமான கே ஆர் ஜி, முதல் முறையாக தமிழில் திரைப்படத் தயாரிப்பில் அடியெடுத்து வைக்கிறது.

2017 ஆம் ஆண்டு தனது திரைப்பட விநியோக வணிகத்தைத் தொடங்கி இதுவரை 100ற்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெற்றிகரமாக விநியோகித்திருக்கும் கே ஆர் ஜி. நிறுவனம், 2020 இல் முழு நேர தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்தது.

ரோஹித் படக்கி இயக்கத்தில் தனஞ்ஜெய் நடித்து அமேசானில் வெளியான “ரத்னன் பிரபன்ஜா” திரைப்படத்தின் மூலம் உள்ளே வந்தது.

அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, 2023 மார்ச் மாதத்தில் வெளியான “குருதேவ் ஹொய்சாலா” என்கிற வெற்றிப்படம் கொடுத்தது.

அந்நிறுவனத்தினர்,இயக்குநர் அஞ்சலிமேனனுடன் இணைந்து தனது முதல் படைப்பை தமிழில் எடுக்கவிருக்கிறார்கள்.

கே ஆர் ஜி உடன் இனைவது பற்றி அஞ்சலிமேனன் கூறுகையில்….

கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் உடன் இணைய இருக்கும் இவ்வேளையில் மக்களை ஈர்க்கக்கூடிய வகையில் நமது கலாச்சாரத்தை மையமாக வைத்து உலகத்தரத்தில் படங்கள் எடுப்பதிலும், இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி, கதை நிலப்பரப்புக்களுக்கு அப்பால் பார்வையாளைகளை ஒன்றிணைத்து அவர்கள் மறக்கவே முடியாத, சிந்தனையைத் தூண்டுகிற அதே சமயம் பொழுது போக்கு நிறைந்த திரைப்பட பயணங்களுக்கு கூட்டிச் செல்ல ஆர்வமாக உள்ளோம் என்றார்

கே ஆர் ஜி யின் இணை நிறுவனர் கார்த்திக் கவுடா கூறுகையில்…..

அஞ்சலிமேனனுடனான எங்கள் ஒத்துழைப்பு எங்களுக்கு ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. கதை சொல்லும் நேர்த்தியே பிரதானம் என்றாலும், நாங்கள் சினிமா தன்னுள் வைத்திருக்கும் மாயையை நம்புகிறோம். இந்தக் கூட்டாண்மையானது பலதரப்பட்ட பகுதிகளில் சிதறிக் கிடக்கும் பார்வையாளர்கள் மற்றும் இந்திய மொழிகளில் உள்ள கதைகளை எதிரொலித்து, ஒரு சேர வடிவமைப்பதில் எங்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும், இந்தப்பயணம், நானும் எனது அன்பு நண்பரும், அனுபவமிக்க பொழுதுபோக்கு நிர்வாகியுமான விஜய் சுப்ரமணியமும் விவாதிக்கையில் கதை/கருத்து அடிப்படையிலான கதைகள் ஒரு நல்ல திரைப்படமாக உருவெடுத்தால் அது பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் அளவில்லாதது என உணர்கையில் தொடங்கியது. அவரும் எங்கள் திறனைக் கண்டு எங்களுடன் ஒரு வழிகாட்டியாகவும், இணை தயாரிப்பாளராகவும் ஒத்துழைக்க முடிவு செய்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஒத்த எண்ணம் கொண்ட நண்பர்களின் ஒத்தாசையுடன் துல்சியாவை
(துல்சியா ஒரு முன்னணி ஊடக மேலாண்மை நிறுவனமாகும், இது இந்தியா மற்றும் சர்வதேச அளவில் முன்னணி எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள்,தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது) சேர்ந்த சைதன்ய ஹெக்டே போன்றோருடன் கூட்டாண்மைகளை உருவாக்கி, பார்வையாளர்களுக்கு எங்களின் சேவையை சிறப்பானதாகவும் எல்லாவற்றிற்கும் மேலாகவும் வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts