ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த் உட்பட பலர் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தது என்றார்கள். எடுத்தவரை போட்டுப்பார்த்தால் வெட்டி வீசியது போக சுமார் ஏழுமணி நேரப் படம் இருந்ததாம். அதனால் அதை இரண்டு படங்களாக மாற்றிவிடலாம் என்று
சினிமா
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம், ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இப்படம் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு நேற்று
இவ்வாண்டு தீபாவளி நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால் தீபாவளி வெளியீட்டுப்படங்கள் இரண்டு நாட்கள் முன்னதாக அதாவது நவம்பர் பத்தாம்தேதியே வெளியாகவிருக்கிறது. ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஜப்பான், கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ராகவாலாரன்ஸ் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கார்த்தி இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்துள்ள ரெய்டு ஆகிய படங்கள்
விஜய் நடித்துள்ள லியோ அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களுடனும் நல்ல வசூலுடனும் ஓடிக்கொண்டிருக்கிறது.இது விஜய் நடித்துள்ள 67 ஆவது படம். ஆனால், இப்படம் வெளியாகுமுன்பே விஜய்யின் 68 ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. விஜய் 68 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 21,2023 அன்று வெளியானது. அப்போது வெளியிடப்பட்ட
நடிகர் விக்ரம் இப்போது பா.இரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படத்தின் குறுமுன்னோட்டம் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தங்கலான் படத்துக்கு அடுத்து விக்ரம் நடிக்கும் புதியபடம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. ஆனால்,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை நேற்றிரவு அமைச்சர் உதயநிதி பார்த்தார்.அவருடன் லியோ படக்குழுவினரும் படம் பார்த்துள்ளனர். படத்தைப் பார்த்துவிட்டு அதிகாலை 3 மணி அளவில் அப்படத்தைப் பற்றிய தன் கருத்தை சமூகவலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது…
லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், ’லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதாவது, நேரம் குறிப்பிடாமல் ஒரு நாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருந்தது. இந்தச் சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில்
விஜய் நடித்துள்ள லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படத்துக்கான திரையரங்க முன்பதிவு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கவில்லை. அதற்குக் காரணம், இன்னமும் சென்னை செங்கல்பட்டு பகுதிகளில் திரையரங்குகளோடு ஒப்பந்தம் போடப்படவில்லை. ஏன்? வழக்கமாக விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் எம்ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி
சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இதற்கடுத்து சூர்யா நடிக்கவிருக்கும் புதியபடத்தின் வேலைகள் தொடங்கியிருக்கின்றன. சூர்யா 43 என்றழைக்கப்படும் அந்தப்படத்தை சுதாகொங்கரா இயக்குகிறார். 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தில், நஸ்ரியா,துல்கர்சல்மான் உட்பட பலர்
விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி படக்குழு விண்ணப்பித்திருந்ததை ஒட்டி அக்டோபர் 10 ஆம் தேதி வெளியான அரசாணையில் சிறப்புக்காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை (ஒரு நாளைக்கு 5 காட்சிகள்) சிறப்புக் காட்சிகள் திரையிடலாம் எனவும்




















