காவல்துறை அதிகாரியாக இருந்து பின் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவராக மாறுகிறார் விக்ரம். பெரிய திருட்டு ஒன்றைச் செய்யப் போகுமிடத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிற அளவுக்குச் சிக்கல். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கேயும் அவரைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அங்கிருக்கும் ஆண் செவிலியரான அபிஹாசன்
மேயாதமான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நாயகியாக நடித்துள்ள படம் ஆடை. இப்படத்தை விஜி சுப்பிரமணி என்பவர் தயாரித்திருக்கிறார். இப்படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி காலைக்காட்சி மற்றும் மதியக்காட்சிகளில் படம் வெளியாகவில்லை. மாலை ஆறு மணிக்குப் படம் வெளியானது. இந்தத் தாமதத்துக்குக் காரணம், படத்தின் தயாரிப்பாளர் ஏற்கெனவே தயாரித்த
இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் தனா. இவர் விஜய்யேசுதாஸ் நாயகனாக நடித்த படைவீரன் படத்தை இயக்கியிருந்தார். அடுத்து அவர் இயக்கும் படம் வானம் கொட்டட்டும். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ்,மடானோசெபாஸ்டின், நடிகர் சாந்தனு ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன்,
சர்கார் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் பிகில். அட்லி இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன. படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதில் விஜய் ஒரு பாடலைப் பாடி உள்ளார். இந்தப் பாடலை கடந்த வாரம் பதிவு செய்தனர். தீபாவளிக்குப் படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில்
கமல் தயாரிப்பில் விக்ரம்-அக்ஷரா ஹாசன் நடித்துள்ள படம் ‘கடாரம் கொண்டான்’.இப்படம் தெலுங்கில் ‘மிஸ்டர் கே கே’ என்ற பெயரில் வெளியாகிறது. இதையொட்டி ஐதராபாத்தில் நடந்த விழாவில் விக்ரம், அக்ஷராஹாசன் ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். அப்போது விக்ரம் கூறியதாவது…. எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாதவர் பாலா. சேது படத்தைக் கொடுத்து சிறந்த நடிகனாக மாற்றினார். பிதாமகன் மூலம்
நவீன யுகத்தில் எல்லாவற்றிற்கும் கைபேசி செயலிகள் எனும் மொபைல் அப்ளிகேஷன்ஸ் வந்துவிட்டன்.கைபேசியிலேயே திரைப்படங்களைப் பார்க்க நெட்ப்ளிக்ஸ் (NetFlix) எனும் மொபைல் ஆப் இருக்கிறது. அதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதோ புதிதாக குறும்படங்களுக்காக ஷார்ட்ப்ளிக்ஸ் (ShortFlix) என்றொரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்…..
சிவகார்த்திகேயன் இப்போது இன்று நேற்றுநாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம்,இரும்புத்திரை மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்கிற படம், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் எந்தப்படம் முதலில் வெளியாகும் என்கிற கேள்வி எல்லோருக்கும் இருந்து வந்தது. அவற்றிற்கு இன்று விடை கிடைத்திருக்கிறது. இயக்குநர்கள் மித்ரன் ரவிக்குமார் ,
களவாணி 2 படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்புக் கூட்டம் ஜூலை 17 ஆம் தேதி மாலை நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்வில் நாயகன் விமல் பேசியபோது… இந்தப் படத்தின் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் உதவிய அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கேரளாவில் இன்னொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் அந்த
அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இப்படத்தின் வியாபாரம் இன்னும் முடிவடையவில்லையாம். அஜீத் நடித்திருந்தும் இந்தப் பட வியாபாரம் தாமதமாவதற்குக் காரணம், பட நிறுவனம் சொல்லும் விலைக்கு வாங்க எல்லோரும் பயப்படுவதுதான் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம், ஒரே நேரத்தில் ஏழெட்டு நிறுவனங்கள் இப்படத்தின் தமிழக
அண்மையில் நடந்த அகரம் அறக்கட்டளை விழாவில் பேசிய நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்துப் பேசி அதிலுள்ள ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி, அது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லையென்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார். இதனால், பாஜகவின் தலைவர்களும், அதிமுக அமைச்சர்களும் தனிப்பட்ட முறையில் சூர்யா மீது தாக்குதல் தொடுத்தனர். தனிப்பட்ட முறையில் சூர்யாவுக்கு மிரட்டல்






















