சினிமா செய்திகள்

காவல்துறையில் விஷால் கொடுத்த புகார் – திரையுலகில் பரபரப்பு

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் விஷால். இவர்,விஷால் ஃபிலிம் ஃபேக்டரி எனும் தயாரிப்பு நிறுவனம் மூலமாகப் படங்களையும் தயாரித்து வருகிறார்.

படத்தயாரிப்புக்காக விஷால் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் கடன் வாங்கி உள்ளார்

தனது வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட சில உறுதிமொழி பத்திரங்களை ஆவணங்களாக அளித்து கடன் தொகையைப் பெற்றாக்க் கூறப்படுகிறது.

பின்னர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகும் உறுதிமொழி பத்திரங்களைத் திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாகவும், இதுதொடர்பாக மேலும் மோசடியில் ஈடுபட வாய்புள்ளதாகவும் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் புகார் அளித்துள்ளார்.

ஆர்.பி.செளத்ரி புகழ்பெற்ற தயாரிப்பாளர், அவர் மீது இப்படி ஒரு புகார் அளிக்கப்பட்டிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts