மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் துப்பறிவாளன் 2.விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இந்தப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப் படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு இலண்டனில் நடந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பு 2019 டிசம்பர் இறுதியில் நிறைவடைந்தது.
விஷால் இப்போது மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு இலண்டனில் நடந்து முடிந்திருக்கிறது. அண்மையில் அங்கிருந்து படக்குழுவினர் சென்னை திரும்பியிருக்கிறார்கள். இந்நிலையில், புது இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் சக்ரா படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.
அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த்சங்கர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். ஏராளமான வெற்றிப்படங்களைத் தயாரித்த கே.பி.ஃபிலிம்ஸ் பாலு பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கிறார். வெளிநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. விரைவில் முதல்கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவிருக்கிறதாம்.
நவம்பர் 15 அன்று சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்ஷன் திரைப்படம் வெளியானது. அன்று மாலை சில ஊர்களிலும் அடுத்த நாளான நவம்பர் 16 அன்று பெரும்பாலான ஊர்களிலும் விஜய்சேதுபதி நடித்த சங்கத் தமிழன் படம் வெளியானது. இரண்டு புதுப்படங்கள் வெளியான நிலையிலும், மூன்று வாரங்களுக்கு முன்பு அதாவது அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான விஜய் நடித்த பிகில் படத்துக்கு திரையரங்குகளில் கூட்டம்
விஷால், இராணுவ அதிகாரி, அவருடைய அப்பா பழ.கருப்பையா தமிழக முதல்வர். அண்ணன் ராம்கி துணைமுதல்வர். ராம்கியின் நண்பரும் பெரும் தொழிலதிபருமான வின்செண்ட் அசோகன், தமிழக அரசுத்திட்டம் ஒன்றைச் செயல்படுத்தும் ஒப்பந்தம் பெற்று அதற்காக 4000 கோடி ரூபாய் வங்கிக்கடன் வாங்கிக் கொண்டு வெளிநாட்டுக்கு ஓடிவிடுகிறார். அதைத் தொடர்ந்து இந்தியக்கட்சியுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் நடக்கும்
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா,ஐஸ்வர்யா லட்சுமி,அகன்ஷாபூரி,சாயாசிங்,யோகிபாபு, ராம்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ஆக்ஷன். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்திருக்கும் இந்தப்படம் நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதையொட்டி இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நவம்பர் 8 அன்று நடந்தது. சந்திப்பில் விஷால்,தமன்னா, அகன்ஷாபூரி, சாயாசிங், சாரா, ஹிப்ஹாப்தமிழா
2004 ஆம் ஆண்டு காந்திகிருஷ்ணா இயக்கத்தில் உருவான செல்லமே படத்தில் நாயகனாக அறிமுகமானார் விஷால். அவருடைய தந்தையே தயாரித்த படம் அது. அதில் பரத் வில்லனாக நடித்திருந்தார். ரீமாசென் நாயகி. ஆரிய உதடுகள் உன்னது என்கிற வைரமுத்துவின் பாடல் பரபரப்பைக் கிளப்பியது. முதல்படத்திலேயே மிகுந்த வரவேற்பைப் பெற்றார் விஷால். ஆனாலும் அப்படம் பொருளாதார ரீதியாக நட்டம். ஆனால் இரண்டாவது
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.சி மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் இந்த “ஆக்ஷன்” திரைப்படம். இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி கூறியதாவது…. விஷாலுடன்
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுவுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. நடிகர் சங்கத்திலிருந்து பல உறுப்பினர்கள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பாகப் பலர் புகார் அளித்தனர். அதனால் தென்சென்னை சங்கங்களின் பதிவாளர், நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்திவைத்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து நடிகர் நாசர் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில், தேர்தலை
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஜூன் 23 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் களமிறங்கின. இதில் பாண்டவர் அணியில் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத்தலைவர்கள் பதவிக்கு கருணாஸ்,























