நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இது நடிகர் சூர்யா மற்றும் பிரபல இயக்குநர் ஜித்து மாதவன் இணையும் முதல் திரைப்படம் ஆகும். இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, நஸ்ரியா நசீம்
தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களில் பலர் சில வருடங்களுக்கு முன்பு நடித்த வெற்றிப் படங்கள் சமீபகாலமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மறுவெளியீடு செய்யப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு என்.லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படம் 4k தொழில்நுட்பத்தில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வரும் நவம்பர் 28ஆம்
விஜய்-சூர்யா ஆகியோர் இணைந்து நடித்து 2001 ஆம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘ப்ரண்ட்ஸ்’. ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான இந்தத் திரைப்படம் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் 4கே தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஜாக்குவார் ஸ்டுடியோஸ்
சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி வரும் படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான
ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.அண்மையில் வெளியான படத்தின்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாகச் சொல்லப்பட்ட படம் வாடிவாசல்.ஜனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அறிவித்தார்.இது ஒரு நாவலின் கதையைக் கொண்டு உருவாகும் என்று சொல்லப்பட்டது. வாடிவாசல் என்ற நாவல் பிரபல எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதியது.
சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான படம் ரெட்ரோ. ரெட்ரோ படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த
அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படமொன்றை பம்பர் பட இயக்குநர் எம்.செல்வக்குமார் இயக்குகிறார். சித்தார்த் நடிப்பில் என்.ராஜசேகர் இயக்கத்தில் வெளியான மிஸ்யூ படத்தைத் தயாரித்த நிறுவனம் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவின் ஷிமோகாவில் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.தொடக்கத்திலேயே சில சிக்கல்கள் ஏற்பட்டதால் ஒளிப்பதிவாளர் மாற்றம்
தூத்துக்குடியில் மிகப்பெரிய தாதாவின் வளர்ப்பு மகனான சூர்யாவும் தாதாதான்.ஒரு கட்டத்தில் அந்தத் தொழிலிலிருந்து விலகி திருமணம் செய்து அமைதியாக வாழ ஆசைப்படுகிறார்.அப்போது அப்பாவுக்கும் மகனுக்கும் மோதல் அதனால் திருமணம் தடைபடுகிறது.சூர்யா சிறைப்படுகிறார்.நாயகி காணாமல் போகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் ரெட்ரோ. சிரிப்பால் அனைவரையும் ஈர்க்கும்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ், ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.




















