சிம்பு நடிப்பில் கெளதம்மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இதற்கடுத்து சிம்பு ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி பத்துதல படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு குறித்து எந்தத் தகவலும் இல்லை. அதுமட்டுமின்றி அப்படம்
கௌதம்மேனன் – ஏ.ஆர்.ரகுமான் – சிம்பு கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. விண்ணைத் தாண்டி வருவாயா, ‘அச்சம் என்பது மடமையாடா’ ஆகிய படங்களுக்குப் பிறகு உருவாகியிருக்கும் இந்தக் கூட்டணிக்கு இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஐசரி கணேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தி இதானி நாயகியாக
சில நாட்களுக்கு முன் தில்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37 ஆவது கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு
கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார். இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும்
மாநாடு படத்தைத் தொடர்ந்து அதன் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி ஐந்து படங்களைத் தயாரிக்கிறார். அவற்றில் முதல்படமாக ராம் இயக்கத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கும் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அடுத்து வெற்றி கதாநாயகனாக நடிக்கும் ஜீவி2 படம் அறிவிக்கப்பட்டு அதன் படப்பிடிப்பும் நடந்துகொண்டிருக்கிறது. இவற்றிற்கடுத்து பாலாஜிசக்திவேல் இயக்கத்தில் சாண்டி மாஸ்டர் கதாநாயகனாக
தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து 2016 ஆம் ஆண்டு வெளியான படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன். இந்தப் படத்தில் நடிக்க சிம்புவுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 1 கோடியே 51 லட்சம் ரூபாய் முன் பணமாக வழங்கப்பட்டது. இதில் சம்பள பாக்கி 6 கோடியே 48 லட்சம் ரூபாயை பெற்றுத்தரக் கோரி நடிகர் சிம்பு, நடிகர் சங்கத்தில் புகார் மனு அளித்திருத்திருந்தார்.
ஹாட்ஸ்டார் இணையதளத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் அதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார். அவருக்கடுத்து அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருப்பவர் சிம்பு. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லையெனினும் அவர் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது என்கிறார்கள். இந்நிகழ்ச்சி இன்னும்
விஜய் தொலைக்காட்சியில் ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி பெரும் கவனம் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, டிஸ்னி + ஹாட்ஸ்டார் இணையதளத்தில் 24 மணி நேரமும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த ஐந்து பாகங்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களிருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்து கொண்டு வருகின்றனர். 24/7 ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் வனிதா,
சிம்பு இப்போது கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு கிருஷ்ணா இயக்கும் பத்துதல படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. இவ்விரு படங்களுக்கு அடுத்து கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்கிற படத்தில் அவர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாகுமார் அவருக்கு 49
ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாகவும்,சிருஷ்டி டாங்கே நாயகியாகவும் நடித்துள்ளனர்.இவர்களுடன் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி