பத்துதல படப்பிடிப்பு தொடக்கம் – சிம்பு உற்சாகம்

சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் பத்துதல. இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள்.
கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படத்தைத்தான் பத்துதல என்கிற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார்.அதன்பின், இயக்குநர் நார்தன் விலகிக் கொள்ள சில்லுனு ஒரு காதல் உட்பட சில படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு ஜூன் 15 இல் தொடங்கியது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளைத் தாண்டி ஜூன் 6 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. படப்பிடிப்பு தொடங்கி மொத்தமாகப் படத்தை முடித்துவிடத் திட்டமிட்டிருந்தார்கள்.
இதற்காக, முடி அதிகமாக வளர்ப்பது தாடி வளர்ப்பது உடல் எடையைக் கூட்டுவது போன்று எல்லா விசயங்களையும் செய்து படப்பிடிப்புக்குத் தயாராகிவந்தார் சிம்பு.
இந்நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக சிம்புவின் தந்தை டி.இராஜேந்தருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை.
இப்போது எல்லாச் சிக்கல்களையும் தாண்டி படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.
ஜூலை 30 ஆம் தேதி முதல் பத்துதல படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் தொடங்கவிருக்கிறதாம். ஒரேகட்டமாக மொத்தப் படப்பிடிப்பையும் நிறைவு செய்யத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இன்னொரு முக்கியச் செய்தி என்னவென்றால், நிறைய இடைவெளி கிடைத்ததால் திரைக்கதையை நன்றாக மெருகேற்றி வைத்திருக்கிறாராம் இயக்குநர் கிருஷ்ணா. மெருகேற்றப்பட்ட வடிவத்தைக் கேட்ட சிம்பு மிகவும் உற்சாகமாகிவிட்டாராம்.
இந்தப்படமும் சிம்புவின் திரைப்பயணத்தில் முக்கியமான் படமாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.