செய்திக் குறிப்புகள்

மலேசிய ஹிப்ஹாப் பாடகர் கிட்சாந்தேவின் புதியபாடல் வெளியீடு – விவரம்

மலேசியாவில் உருவாகி வரும் புதியதலைமுறை தமிழ் ஹிப்-ஹாப் இசையில் முக்கியமான குரலாகக் கொண்டாடப்படுபவர்
கிட் சாந்தே (Kidd Santhe ).

தமிழ்,ஆங்கிலம்,மலாய்,பஞ்சாபி போன்ற பல மொழிகளைக் கலந்த ராப் ஸ்டைலே இவரின் தனிச்சிறப்பு.  
சிறு வயதிலிருந்தே பீட் பாக்சிங் (beatboxing) மற்றும் இசையில் ஆர்வம் கொண்ட கிட் சாந்தே, தனது 16 ஆவது வயதில் பாடல்கள் தயாரித்து சவுண்ட் க்ளவுட் (SoundCloud) மூலம் பிரபலமானார்.

பின்னர் மலேசிய ஹிப்-ஹாப் குழுக்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை வெளியிட்டார்.தற்போது உலகளாவிய தேசி ஹிப்ஹாப் (Desi Hip-Hop) இயக்கத்தில் முக்கியமான இளம் கலைஞர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார்.  

“API”, “SAMPAH”, “Ambani Money”, “Penjenayah” போன்ற பாடல்கள் மற்றும் ஆல்பங்கள் மூலம் இரசிகர்களிடம் கவனம் பெற்றார். குறிப்பாக “Ambani Money” பாடல் மூலம் இந்திய கலாச்சாரம், செல்வாக்கு மற்றும் இளைஞர்களின் ஆற்றலை ஹிப்-ஹாப் ஸ்டைலில் வெளிப்படுத்தியிருந்தார்.  

தற்போது இந்திய கலாச்சார பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள அவரது அடுத்த பாடலான “நா வேற லெவல் ஆல்பம்” நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. இப்பாடலை முன்னணி இசை நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.“நா வேற லெவல்” பாடலை சோனி மியூசிக் யூடியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக கண்டுகளிக்கலாம்.

இப்பாடல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு மே 20 அன்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் இயக்குநர் பார்த்திபன் ரவி பேசியதாவது…

முதலில் கடவுளுக்கும், Sony Music Malaysia மற்றும் Sony Music South ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.இந்தவாய்ப்பை வழங்கியதற்கு மிக்க நன்றி.இது என்னுடைய முதல் International Album.ஏற்கனவே Sony Music உடன் இரண்டு மியூசிக் வீடியோக்கள் செய்திருந்தாலும்,இந்த புராஜக்ட் எனக்கு மிகவும் ஸ்பெஷல் மற்றும் மனதுக்கு நெருக்கமான ஒன்று.
கிட் சாந்தே உங்கள் அற்புதமான ஐடியாவை உயிர்ப்பிக்க இந்தவாய்ப்பை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி.திலீபன் இல்லாமல் இந்த ஆல்பம் உருவாகியிருக்கவே முடியாது.குணா மற்றும் ரே — “Mother of Dragons” போல இந்த ஆல்பம் பாடலுக்கு அனைத்து பக்கங்களிலும் ஆதரவைத் திரட்டிக்கொண்டு வந்தவர்கள் நீங்கள்தான்.ஒவ்வொரு டிராக்குக்கும் நீங்கள் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது. இந்த ஆல்பம் பாடலில் உழைத்த அனைத்துக் கலைஞர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இப்பாடலை இரசித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்றார்.

சோனி மியூசிக் நிறுவனம் சார்பில் ரேவதி மாரியப்பன் பேசியதாவது.., 

கிட் சாந்தே அவர்களின் முதல் சர்வதேச தமிழ் இசை வெளியீட்டிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.இந்த இணைப்பிற்கு ஆதரவு அளித்த சோனி மியூசிக் சவுத் மற்றும் இந்த ஆல்பத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.இந்தப் பாடலை மலேசியாவில் எடுப்பதாக இருந்தது ஆனால் இதை சென்னையில் எடுக்கலாம் என கிட் சாந்தே சொன்னார்.சோனி நிறுவனமும் பெரிய ஆதரவு தந்தது. 
இந்த ஆல்பத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்த அன்பும் ஆதரவும் எங்களை மிகவும் நெகிழச்செய்தது.மலேசியாவிலிருந்து வந்த ஒரு தமிழ்க் கலைஞரை இவ்வளவு அன்பாக வரவேற்ற அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.இந்தப் பாடல் உருவாகப் பல மாதங்களாக ஒரு பெரிய குழு கடினமாக உழைத்துள்ளது.தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல்,நூற்றுக்கணக்கான கலைஞர்களின் உழைப்பையும் ஒன்றிணைத்து இந்தப்பாடலை உருவாக்கியுள்ளோம்.கிட் சாந்தேவின் இந்த வெற்றி அவருடையது மட்டும் அல்ல;மலேசியாவில் இருக்கும் பல தமிழ்க்கலைஞர்களின் கனவுகளுக்கான தொடக்கமாகவும் இது அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.
தமிழ்நாடு எப்போதும் திறமையை அங்கீகரிக்கும் மண்.அந்த நம்பிக்கையோடு இந்தப்பாடலை உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம் நன்றி என்றார்.

ராப்பர் கிட் சாந்தே பேசியதாவது..,

அனைவருக்கும் வணக்கம்.இன்று இங்கே “நா வேற லெவல்” பாடலை ஆதரிக்க வந்திருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்தப்பயணத்தில் என்னை நம்பி முழுமையாக ஆதரவு அளித்த Sony Music South மற்றும் Sony Music Malaysia-க்கு என் நன்றிகள்.
இந்த ஆல்பம் உருவாகக் காரணமான மிகமுக்கியமான நபர் இயக்குநர்.ஒரு storyboard-ஐ உயிரோட்டமுள்ள காட்சியாக மாற்றியது இயக்குநர் ரவிதான்.அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.அதேபோல் மூன்றுநாட்களிலேயே எனக்கு நடனம் கற்றுக்கொடுத்த நடனஇயக்குநர் ஆகாஷ் அவர்களுக்கும் நன்றி.
ராவணராம் என் சகோதரன் போன்றவர்.Instagram-ல் ஒரு மெசேஜ் மூலம் தொடங்கிய நட்பு,ஒரே studio session-ல் “நா வேற லெவல்” பாடலை உருவாக்கியது.அவருடைய திறமை அசாதாரணமானது.
இந்தப்பாடல் மூலம் நான் என்னை ஒரு நடிகராகவோ அல்லது இசையமைப்பாளராகவோ காட்ட விரும்பவில்லை. தமிழ்நாட்டின் உண்மையான ஹீரோக்களை காட்டவே இந்தப்பாடலை உருவாக்கினேன் — ஆட்டோ ஓட்டுநர்களை.தினமும் மக்களைப் பாதுகாப்பாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்லும் அவர்கள்தான் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் மறைக்கப்பட்ட ஹீரோக்கள்.சென்னைக்கு முதன்முதலாக வந்தபோது,என் கார் பஞ்சர் ஆகி நின்றது.ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு டயர் மாற்ற உதவிய அந்தத்தருணமே இந்தப்பாடலின் முழுகருத்தாக மாறியது.“நா வேற லெவல்” என்பது நான் அல்ல,ஆட்டோ ஓட்டுநர்கள்தான்.
அவர்கள் இன்று எரிபொருள் விலை உயர்வு, பராமரிப்பு செலவு, பைக் டாக்ஸி போட்டி போன்ற பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். இந்தப்பாடல் மூலம் அவர்களுக்கான மரியாதையும் அன்பும் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதே என் நோக்கம்.
நான் ஒரு மலேசிய இளைஞன்.இசையைக் கொண்டு உங்கள் முன் வந்திருக்கிறேன்.தமிழ்நாடு எனக்கு கொடுத்த அன்புக்கும் வரவேற்புக்கும் மனமார்ந்த நன்றி.“நா வேற லெவல்” பாடலை YouTube-ல் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts