திரை வாழ்க்கையில் பெயர் பெற்ற ஆர்யா சாயிஷா ஜோடி திருமணம் செய்து நிஜ வாழ்க்கையில் இணைந்த பின் மீண்டும் திரையில் ஜோடியாக தோன்ற இருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘டெடி’ படத்தில் நாயகன் ஆர்யா.நாயகி சாயிஷா. ஆர்யாவின் நடிப்பிற்கு தீனி கொடுக்கும் வகையில்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இன்னும் ஒரு பாடல்காட்சி மட்டும் படமாக்கப்படவேண்டியிருப்பதாகச் சொல்லப்பட்டது. அது சூர்யா சாயிஷா ஆகிய இருவரும் நடிக்கும் காதல்பாடல். ஹாரிஸ்ஜெயராஜ் இசையில் கபிலன் எழுதியுள்ள அந்தப் பாடல்பதிவு மிக அண்மையில் நடைபெற்றது. அந்தப்பாடலை,அழகிய தமிழ்மகன் படத்தில் இடம்பெற்ற
சூர்யா நடிக்கும் 37 ஆவது படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்குகிறார்.லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில், மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு பாடல்காட்சி மட்டும் படமாக்கப்படவேண்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது சூர்யா சாயிஷா ஆகிய இருவரும்
ஆர்யா இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூரியா மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிக்கும் காப்பான் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆர்யாவின் மனைவியாகப் போகிற சாயிஷாதான் இந்தப்படத்தின் நாயகி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து,குட்டிப்புலி,கொம்பன்,மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களின் இயக்குநர் முத்தையா.
2005 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் ஆர்யா. ஒரு சில படங்களிலேயே மக்களுக்கு நன்கு அறிமுகமாகிவிட்டார். அவர் நடித்த படங்கள் ஓடுகிறதோ இல்லையோ தொடர்ந்து படங்கள் கிடைத்துக்கொண்டேயிருக்கிறது. இளம்பெண்களுக்குப் பிடித்த நடிகர் என்பது அவருக்குப் பலம். திரையுலகிலும் பல நடிகைகளுடன் அவர் நட்பாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. கொஞ்ச காலம் நயன்தாராவின் காதலர் என்றும் சொல்லப்பட்டவர்.
இந்தியா மீது 17 முறை படையெடுத்தவர் கஜினிமுகமுது. விடாமுயற்சிக்கு உதாரணமாக அவரைச் சொல்வார்கள். ஏ.ஆர்.முருகதாஸ், மறதிக்காரரை மையமாகக் கொண்ட கதைக்கு கஜினி என்று பெயர் வைத்தவுடன், கஜினி என்றால் மறதிக்காரர் என்ற அடையாளம் வந்துவிட்டது. கஜினிகாந்த் அதை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. தர்மத்தின்தலைவன் பட ரஜினி போல் ஞாபக மறதிக்காரர் ஆர்யா. ஒரே நேரத்தில் அழகான பெண்ணின்
2017 இல் ஹரஹரமஹாதேவகி, 2018 மே மாதத்தில் இருட்டுஅறையில் முரட்டுக்குத்து ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் சந்தோஷ்பிஜெயகுமார். இவ்விரு படங்களுமே வெற்றி என்ற போதும் அவை இரண்டுமே வயது வந்தவர்களுக்கான படம் என்பதால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார் இயக்குநர் சந்தோஷ்பிஜெயகுமார். நாளை வெளியாகவிருக்கும் கஜினிகாந்த் அவருடைய மூன்றாவதுபடம். ஆர்யா, சாயிஷா, கருணாகரன்,சதீஷ் உட்பட பலர்
கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சாயிஷா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்த படம் ஜுங்கா. ஜூலை 27 அன்று வெளியான இந்தப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதோடு நல்ல வசூலையும் பெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையும் பெரிய விலைக்குப் போயிருப்பதாகச் சொல்கிறார்கள். விஜய்சேதுபதி படங்களுக்கு இதுவரை கிடைக்காத அளவு இந்தப்படத்தின்
ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயகுமார் இப்போது எழுதி இயக்கியிருக்கும் படம் கஜினிகாந்த். ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப்படம் பற்றி படத்தின் நாயகன் நடிகர் ஆர்யா கூறியதாவது… இந்தப் படம் தெலுங்கு படத்தின் ரீமேக். இதற்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் காரணம். படப்பிடிப்பிற்கான முன்தயாரிப்புகளை ஏழே நாட்களில்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார் பாரதி, உழவுக்கும் உறவுக்கும் வந்தனம் செய்வோம் என்கிறார் பாண்டிராஜ். இரண்டு மனைவிகள் ஐந்து பெண் குழந்தைகள் என்று வாழும் பெரிய குடும்பஸ்தர் சத்யராஜூக்குக் கடைசியாக கார்த்தி பிறக்கிறார்.அவர்தான் கடைக்குட்டி சிங்கம் கார்த்தி. படத்தின் பெயருக்கு நியாயம் செய்தாயிற்று. பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்காத அவர் பேராசையுடன் விவசாயம்




















