நான் வெட்ட வெட்டத் தழைப்பேன் இறப்பினில் கண் விழிப்பேன் மரங்களில் நான் ஏழை எனக்கு வைத்த பெயர் வாழை என்று ஏட்டில் கவி வடித்தார் கவிஞர் மு.மேத்தா. அந்தப் பெயரை வைத்து திரையில் கவி படித்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் கிராமம் அழகானது.அதன் வாழ்க்கை
அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி, ஈ4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல் எல் பி ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான சைக்கோ திரில்லர் படம் “போர் தொழில்”. இரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளை திருவிழாக்கோலமாக மாற்றியிருக்கிறது. இன்று வரையிலும் அரங்கு
கொடூரமான கொலைகள் நடக்கின்றன, அவற்றை துப்புதுலக்கும் காவல்துறை அதிகாரிகள், அவர்களுக்குள் நடக்கும் நீயா நானா? போட்டி, அவற்றைத் தாண்டி தொழிலில் அவர்கள் காட்டும் திடம், குற்றவாளி யார்? ஏன்? ஆகியனவற்றை அழகாக வரிசைப்படுத்தியிருக்கும் படம் போர் தொழில். சரத்குமாரின் வேடம் அவருடைய அனுபவத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது போலவே அமைந்திருக்கிறது. எதையும் சாதிக்கும் அறிவுத்திமிரை அழகாக
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர்.சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்க, கலை இயக்கத்தை இந்துலால் கவீத் மேற்கொண்டிருக்கிறார்.
அரியவகை நோய்களில் ஒன்றான ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் என்கிற நோய்த் தாக்கம் உள்ள கதாநாயகன் சிபிராஜ். குழம்பவேண்டாம், இந்த நோய் உள்ளவர்கள் கை அவர்கள் நினைப்புக்குக் கட்டுப்படாமல் தன் போக்குக்கு வேலை செய்யும். எடுத்துக்காட்டாக, இங்கு கைகளைக் கட்டிக் கொண்டு நிற்கவேண்டும் என நீங்கள் நினைக்கும் இடத்தில் எதிரில் உள்ளவர் முகத்தில் உங்கள் கை குத்துவிடும். நீங்கள் சிக்கலில் மாட்டிக்
















