மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பகுதிகளாகத் திரைக்கு வரத் தயாராகி வருகிறது. முதல்பாகம் செப்டம்பர் 30, 2022 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. இரண்டாம்பாகத்தை சனவரி 14,2023 இல்
உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம், பல திரைப்படங்களின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. இவ்வாண்டு தொடக்கத்திலேயே விஷ்ணுவிஷால் நடித்த எஃப ஐ ஆர் படம் மூலம் திரைப்பட விநியோகத்தைத் தொடங்கிய ரெட்ஜெயண்ட் நிறுவனம், அதன்பின் விஜய் நடித்த பீஸ்ட், விஜய்சேதுபதியின் காத்துவாக்குலரெண்டுகாதல், சிவகார்த்திகேயனின் டான், உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி
கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2.ஷங்கர் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ்,
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன்,காஜல் அகர்வால்,நெடுமுடி வேணு, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருந்த படம் இந்தியன் 2. இப்படம், சனவரி 18,2019 அன்று படப்பிடிப்புடன் சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. அதன்பின் பல்வேறு இடையூறுகளுக்கிடையே படப்பிடிப்பு தொடர்ந்தது.படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா சிக்கல் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு
தமிழின் முக்கியமான புதினங்களில் ஒன்று கல்கியின் பொன்னியின்செல்வன். அது திரைப்படமாக உருவாகியிருக்கிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா உட்பட பலர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாகத் தயாராகியிருக்கும் இப்படத்தின் முதல்பாகம் இவ்வாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்றும்
விக்ரம் படத்தின் பெரிய வசூல் காரணமாக மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார் கமல்.இதனால் படத்தில் பணியாற்றியவர்களுக்குப் பரிசுகள், படத்தைப் பாராட்டுபவர்களுடன் சந்திப்பு என உற்சாகமாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவற்றிற்கிடையே அடுத்த படத்துக்கான வேலைகளும் நடந்துகொண்டிருப்பதாகத் தகவல். கமலின் 233 ஆவது படமாக உருவாகவிருக்கும் அடுத்தபடத்தை மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன்
கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் விக்ரம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்திருக்கும் இந்தப் பெருவெற்றியை மகிழ்வுடன் கொண்டாடிவருகிறார் கமல். படத்தில் பணியாற்றிய துணை இயக்குநர்களுக்கு விலையுயர்ந்த துள்ளுந்துகள், இயக்குநர் லோஜேஷ்கனகராஜுக்கு விலையுயர்ந்த மகிழுந்து, படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்த
விக்ரம் படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கவிருக்கும் படம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. அடுத்து மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது. இந்தப்படத்தையும் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இப்போது அதில் மாற்றம் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. டான் படத்தின் வெற்றிவிழாவில் கலந்து
சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த்தை அவர் வீட்டுக்குச் சென்று சந்தித்தார் நடிகர் கமல்.அவர் மட்டுமின்றி விக்ரம் பட இயக்குநர் லோகேஷ்கனகராஜ் விக்ரம் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேந்திரன் ஆகியோரும் ரஜினிகாந்த்தைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்புகளுக்குக் காரணம், விக்ரம் படவெளியீட்டையொட்டி ரஜினிகாந்தின் ஆதரவைக் கோருவது என்பதுபோல் சொல்லப்பட்டது. ஆனால், அந்தச்
இரண்டு இலட்சம் கோடி மதிப்பிலான போதைப்பொருளை ஒரு காவல்துறை அதிகாரி அதிரடியாகப் பறிமுதல் செய்து தனது துறைக்கே தெரியாமல் மறைத்து வைக்கிறார். அதனால் அவரை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொலை செய்கிறார்கள். அக்கொலையில் சம்பந்தப்பட்ட வில்லன்கள் மர்ம முகமூடி மனிதர்களால் கொலை செய்யப்படுகிறார்கள். அக்கொலைகளைச் செய்வது யார்? என்று கண்டுபிடிப்பதுதான் படம். கமலைச் சுற்றியே திரைக்கதை





















