நவம்பர் 15 அன்று சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்ஷன் திரைப்படம் வெளியானது. அன்று மாலை சில ஊர்களிலும் அடுத்த நாளான நவம்பர் 16 அன்று பெரும்பாலான ஊர்களிலும் விஜய்சேதுபதி நடித்த சங்கத் தமிழன் படம் வெளியானது. இரண்டு புதுப்படங்கள் வெளியான நிலையிலும், மூன்று வாரங்களுக்கு முன்பு அதாவது
அட்லி கதை எழுதி இயக்கியிருக்கும் பிகில் படம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியானது. படம் வெளியாகுமுன்பே அப்படத்தின் கதை தொடர்பாக வழக்குகள் நடந்தன. படம் வெளியான பின்பு, பிகில் படத்தின் கதை தொடர்பாக அட்லி மீது தெலுங்கு இயக்குநர் நந்தி சின்னி குமார் ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- மராட்டியத்தைச் சேர்ந்த கால்பந்து
புகழ்பெற்ற இந்தி நடிகர் ஷாரூக்கான் நேற்று தனது 54 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதையொட்டி நேற்றிரவு திரையுலகில் தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து விருந்து கொடுத்துள்ளார் ஷாரூக்கான். அவ்விருந்தில், இயக்குநர் அட்லீ தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அதேபோல் இயக்குநர் வெற்றிமாறனும் கலந்து கொண்டார். இரண்டு இயக்குநர்களும் ஷாரூக்கானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்
விஜய்யின் பிகில் படத்தை இயக்கியிருக்கும் அட்லி, அடுத்து இந்தி நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கவிருக்கிறார் என்கிற பேச்சு இருக்கிறது. இந்நிலையில் இன்று, ஷாருக்கும் அட்லியும் இணைந்து பணிபுரியும் படத்தின் பெயர் சங்கி என்று சொல்லப்பட்டிருக்கிறது. யாரும் அறிவிக்காமலேயே சமூக வலைதளங்களில் இந்தப்பெயர் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது அந்த செய்தி ட்விட்டரில் இந்தியளவில்
அழகி திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் ஜார்ஜ் மரியான். நகைச்சுவை மற்றும் சிறுசிறு துணை கதாப்பாத்திரங்களில் தலைகாட்டுபவர். இந்த தீபாவளியை ஒட்டி வெளியான விஜய்யின் “பிகில்”,கார்த்தியின் “கைதி” ஆகிய இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார். “பிகில்” படத்தில் சர்ச் ஃபாதராக கலக்கியிருகும் இவர், “கைதி” படத்தில் அரங்கம் அதிரும் மாஸ் போலீஸாக கலக்கியுள்ளார்.
விஜய் நடித்திருக்கும் பிகில் திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான இந்தப்படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. படம் வெளியான வார இறுதி நாட்களில் திரையரங்குகளில் கூட்டம் அதிகம் என்றும்
விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் 64 என்றழைக்கப்படும் அந்தப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய இரண்டாவது படம் கைதி வெளியானது. அதுவும் விஜய்யின் பிகில் வெளியான அன்றே கைதியும் வெளியானது. அப்படம் விஜய் படத்தைவிட நன்றாக
திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கஸாலி, தன் நண்பர்களுடன் பிகில் படம் பார்க்கப் போன இடத்தில் நடந்த கசப்புகளைப் பதிவு செய்துள்ளார்.வெகுமக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் அப்பதிவு…. இன்று(25.10.2019) வேளச்சேரி கிராண்ட் ஸ்கொயர் மால் ‘பிவிஆர்’ தியேட்டரில் பிகில் படம் பார்க்கச் சென்றிருந்தோம். 10 பேர். பிகில் படம் ஏறக்குறைய மூன்று மணி நேரம். முதல் நாள்
ஒரு அமைச்சரையே நேருக்கு நேராக மிரட்டும் அளவு சென்னையில் பிரபல தாதாவாக இருக்கிறார் விஜய். அவர், திடீரென இந்திய அளவிலான போட்டியில் பங்கு கொள்ளும் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராகிறார். ஏன்? எப்படி? அதன்பின் என்ன நடக்கிறது? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் படம். தாதா, கால்பந்து வீரர் என்கிற இரு பாத்திரங்கள் மட்டுமின்றி அப்பா மகன் என்று இருவேடங்களில்
விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் சிறப்புக்காட்சிகள் அதிகாலை 5 மணிக்காட்சி திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அரசு விடுமுறை நாட்களில் மட்டும்தான் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி என்றும் இன்று வேலைநாள் என்பதால் சிறப்புக்காட்சிக்கு அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு சொல்லிவிட்டது. சிறப்புக்காட்சி என்பதால் ஒரு நுழைவுச் சீட்டுக்கு ஆயிரம் ரூபாய்




















